திண்டுக்கல் நகரில் பயங்கரம்.. இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை துரத்திச் சென்ற மர்ம நபர்கள் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் கிருஷ்ணாராவ் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ராம்குமார் திண்டுக்கல் பழனி ரோட்டில் உள்ள முருகபவனம் அருகே லாரி வாடகை நிறுத்தும் இடம் நடத்தி வருகிறார்

இவருக்கு 2016ம் ஆண்டு திருமணமாகி 2017ம் ஆண்டு விவாகரத்து ஆகி உள்ளது. தற்போது ராம்குமார் தனது அம்மாவுடன் வசித்து வருகிறார். தினமும் இரவு கடையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வருவது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று (08.05.21) இரவு கடை முடிந்து வீட்டிற்கு ராம்குமார் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
கோவிந்தாபுரம் மின்மயான சாலையில் வந்து கொண்டிருந்த பொழுது பின்னால் வந்த மர்ம நபர்கள் ராம்குமாரை தாக்கினர். இரு சக்கர வாகனத்தில் இருந்து நிலைகுலைந்து கீழே விழுந்து தப்பி ஓட முயன்றார் .ஓட முயன்றவரை துரத்திய மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஒடி விட்டனர்.

இதனை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர மேற்கு காவல் நிலைய போலீசார் ராம்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன் பகை காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது தொழில் போட்டி காரணமா என பல்வேறு கோணங்களில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications