2024 தேர்தல் வரும் பின்னே.. பழனி- கொடைக்கானல் ரோப் கார் திட்டம் வரும் முன்னே- அறிவித்த உடனே ஆய்வு!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தின் பிரதான சுற்றுலாதலங்களான பழனி மற்றும் கொடைக்கானல் இடையிலான ரோப்கார் திட்டத்திற்கான ஆய்வுப் பணிகளை ஆஸ்திரிய நாட்டு தொழில்நுட்ப வல்லுனர்குழு ஆய்வு மேற்கொண்டது.

தமிழகத்தின் பழனி- கொடைக்கானல், ஸ்ரீநகர், ஸ்ரீசைலம் ஜோதிலிங்கம் கோவில் உள்ளிட்ட 18 இடங்களில் 90 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரோப் கார் சேவை தொடங்கப்படும் என அறிவித்தது மத்திய அரசு.

தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், திரிபுரா, அருணாசலப் பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களில் இந்த ரோப்கார் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் பழனி- கொடைக்கானல் மலைப் பகுதியில் 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரோப் கார் அமைக்கப்பட உள்ளது. மத்திய அரசின் அறிவிப்புகளில் இடம்பெற்ற நீண்டதொலைவு திட்டம் இது. கர்நாடகாவில் 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரோப் கார் அமைக்கப்பட உள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பு வெளியான உடனேயே பழனி- கொடைக்கானல் மலைப் பகுதிகளில் ரோப் கார் அமைக்கும் திட்டம் குறித்த ஆய்வு தொடங்கப்பட்டுவிட்டது. இதற்கான ஆய்வுப் பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டன.

இது தொடர்பாக ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த பர்னாடு நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள், பொறியாளர்கள் குழு ஆய்வு நடத்தியது. மார்கஸ், யார்டு ஆகிய இருவர் தலைமையில் இந்த ஆய்வு நடந்தது. அப்போது பழனி மலையில் இருந்து மேற்குத்தொடர்ச்சி மலைகளின் மேற்கு பகுதிகளை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். பழனி மலையில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவு வரையிலான கொடைக்கானல் மலைகள், ரோப்கார் நிலையம் அமையும் இடங்கள் ஆகியவை குறித்தும் இக்குழு ஆய்வு நடத்தியது. இந்த ஆஸ்திரியா குழுவின் ஆய்வின்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை திண்டுக்கல் மண்டல பொறியாளர் சங்கர சுப்பிரமணி, உதவி பொறியாளர் ராஜசேகரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடத்தப்படுவதற்குள் இந்த ரோப் கார் திட்டத்தை செயல்வடிவம் கொண்டுவருவது என மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதனை வெளிப்படுத்தும் வகையிலேயே இன்று உடனடியாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
-
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு!












Click it and Unblock the Notifications