Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2024 தேர்தல் வரும் பின்னே.. பழனி- கொடைக்கானல் ரோப் கார் திட்டம் வரும் முன்னே- அறிவித்த உடனே ஆய்வு!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தின் பிரதான சுற்றுலாதலங்களான பழனி மற்றும் கொடைக்கானல் இடையிலான ரோப்கார் திட்டத்திற்கான ஆய்வுப் பணிகளை ஆஸ்திரிய நாட்டு தொழில்நுட்ப வல்லுனர்குழு ஆய்வு மேற்கொண்டது.

Central team inspects Palani – Kodaikanal Rope car service

தமிழகத்தின் பழனி- கொடைக்கானல், ஸ்ரீநகர், ஸ்ரீசைலம் ஜோதிலிங்கம் கோவில் உள்ளிட்ட 18 இடங்களில் 90 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரோப் கார் சேவை தொடங்கப்படும் என அறிவித்தது மத்திய அரசு.

Central team inspects Palani – Kodaikanal Rope car service

தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், திரிபுரா, அருணாசலப் பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களில் இந்த ரோப்கார் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் பழனி- கொடைக்கானல் மலைப் பகுதியில் 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரோப் கார் அமைக்கப்பட உள்ளது. மத்திய அரசின் அறிவிப்புகளில் இடம்பெற்ற நீண்டதொலைவு திட்டம் இது. கர்நாடகாவில் 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரோப் கார் அமைக்கப்பட உள்ளது.

Central team inspects Palani – Kodaikanal Rope car service

மத்திய அரசின் அறிவிப்பு வெளியான உடனேயே பழனி- கொடைக்கானல் மலைப் பகுதிகளில் ரோப் கார் அமைக்கும் திட்டம் குறித்த ஆய்வு தொடங்கப்பட்டுவிட்டது. இதற்கான ஆய்வுப் பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டன.

Central team inspects Palani – Kodaikanal Rope car service

இது தொடர்பாக ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த பர்னாடு நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள், பொறியாளர்கள் குழு ஆய்வு நடத்தியது. மார்கஸ், யார்டு ஆகிய இருவர் தலைமையில் இந்த ஆய்வு நடந்தது. அப்போது பழனி மலையில் இருந்து மேற்குத்தொடர்ச்சி மலைகளின் மேற்கு பகுதிகளை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். பழனி மலையில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவு வரையிலான கொடைக்கானல் மலைகள், ரோப்கார் நிலையம் அமையும் இடங்கள் ஆகியவை குறித்தும் இக்குழு ஆய்வு நடத்தியது. இந்த ஆஸ்திரியா குழுவின் ஆய்வின்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை திண்டுக்கல் மண்டல பொறியாளர் சங்கர சுப்பிரமணி, உதவி பொறியாளர் ராஜசேகரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Central team inspects Palani – Kodaikanal Rope car service

2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடத்தப்படுவதற்குள் இந்த ரோப் கார் திட்டத்தை செயல்வடிவம் கொண்டுவருவது என மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதனை வெளிப்படுத்தும் வகையிலேயே இன்று உடனடியாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+