தேச துரோகம்.. சுந்தரவள்ளிய புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்! பரபர புகார்.. என்ன தான் சொன்னாங்க அவங்க?
திண்டுக்கல்: காஷ்மீர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் சுந்தரவள்ளி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக அவர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளதாகவும், அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அளிக்கப்பட்டிருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. நான்கு பயங்கரவாதிகள் ராணுவ உடையில் வந்ததாகவும் மதத்தைக் கேட்டு கேட்டு ஒவ்வொருவரையும் சுட்டுக் கொன்றதாக தாக்குதலை நேரில் கண்ட ஒரு பெண் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொடூர தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பலியானதாக கூறப்படும் நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றதாக வெளியான தகவல், இரு நாடுகளிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.

தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது. அட்டாரி - வாகா எல்லை மூடல், சிந்து நதி நீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு என அடுத்தடுத்து பல அதிரடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்திருக்கிறது. மேலும் பாகிஸ்தானுக்கு நேரடியாக பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டின் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தப்படலாம் எனவும், தகவல் வெளியாகி உள்ளதால் நடைபெற்ற போது திராவிட இயக்க ஆதரவாளரான சுந்தரவல்லி தனது எக்ஸ் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
அதில், ராணுவத்தை பற்றியும் பாஜகவை பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.
சுந்தரவள்ளியின் இந்த பதிவு ராணுவத்தையும் இந்திய இறையாண்மையையும் அவமதிப்பது போல் இருப்பதாகவும் இந்த தாக்குதலை திட்டமிட்டு இந்தியாவை கட்டவிழ்த்து விட்டதாக கூறுவது போல் இருப்பதாக கடும் கண்டனங்கள் எழுந்தது. தொடர்ந்து பலர் அவரது சமூக வலைதள பக்கத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் தொலைபேசி மூலமும் அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுந்தரவள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மீது தேச துரோகச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. திண்டுக்கல் மாவட்ட இந்து முன்னணி பிரமுகர் ஆன செந்தில்வேலு இது தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில்," ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் என்ற இடத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக பாரத தேசத்தையும் இந்திய ராணுவத்தையும் உள்நோக்கத்தோடு இரு பிரிவினர் இடையே கலவரத்தை தூண்டும் விதமாக சுந்தரவள்ளி பதிவிட்டுள்ளார். அவரது பதிவு நாட்டுப்பற்றுள்ள அனைவருக்கும் மன வேதனையை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. சுந்தரவள்ளி பாரத தேசத்திற்கு எதிராகவும் ராணுவத்திற்கு எதிராகவும் ராணுவத்தை அவமதிக்கும் உள்நோக்கத்தோடு செயல்பட்டு இருக்கிறார். மேலும் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் பதிவிட்டுள்ளார். இதனால் அசாதாரணமான சூழல் உருவாகியுள்ளது. எனவே அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
-
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications