பவித்ரா இல்லாமல் வாழ முடியாது.. சுடுகாட்டில் மனைவியை புதைத்துவிட்டு.. தூக்கில் தொங்கிய கணவன்!
மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்டார்
திண்டுக்கல்: கணவன் - மனைவி இருவருமே கைக்குழந்தையை தவிக்க விட்டுவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி பகுதியை வீரணன்.. 25 வயதாகிறது.. இவர் ஒரு டெய்லர்.. இவரது மனைவி பவித்ரா.. 22 வயதாகிறது.

இவரும் அதே ஊரை சேர்ந்தவர்தான்.. 3 வருஷங்களுக்கு முன்பு கல்யாணம் ஆன இவர்களுக்கு ஒன்றரை வயதில் பவிக்ஷா என்ற பெண் இருந்தை இருக்கிறாள்.
இந்நிலையில், பவித்ராவுக்கு சில காலமாகவே வயிற்று வலி இருந்து வந்துள்ளது.. எங்கெங்கோ மருத்துவம் பார்த்தும் வயிறு வலி குணமாகவில்லை.. அதே சமயம் வலியையும் பொறுத்து கொள்ள முடியாமல் பவித்ரா துடித்து வந்தார்.
நேற்று முன்தினம் வயிற்றுவலி அதிகமாகிவிட்டது.. வலியால் கதறிய அவர், அதற்கு மேல் தாங்க முடியாமல் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவியின் சடலத்தை பார்த்து வீரணன் கதறி அழுதார்.. பின்னர், அவரது உடலை ஊர்மக்கள், குடும்பத்தினர் உதவியுடன் சுடுகாட்டில் அடக்கம் செய்து விட்டு வீட்டுக்கு வந்தார் வீரணன்.
ஆனால் அவரால் ஒரு இடத்தில் நிலைகொள்ள முடியவில்லை.. பவித்ராவின் மரணம் அவரை நிலைகுலைய வைத்திருந்தது.. அதனால் அன்றைய தினம் இரவே வீட்டு பக்கத்தில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த இரு தற்கொலைகள் சம்பந்தமாக விளாம்பட்டி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications