கொடைக்கானலில் ‘கலர்புல்’ காய்கறி தமிழன்னை! காலுக்கு அடியில் கவனிச்சீங்களா? அலறியடித்து ஓடிய அதிகாரி!
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 59 வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா துவங்கியுள்ள நிலையில் காய்கறியால் ஆன தமிழன்னை சிலையின் காலுக்கு அடியில் முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வரின் உருவம் இருந்தது சர்ச்சையான நிலையில், அதனை தூக்கிக் கொண்டு அதிகாரி ஒருவர் ஓடிய சம்பவம் நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக மலர் கண்காட்சிக்கு அரசு தடை விதித்தது, இதனையடுத்து கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இந்தாண்டு 59-வது மலர் கண்காட்சியானது 6 நாட்கள் விழாவாக துவங்க உள்ளது,
இன்று தொடங்கி 29 தேதி வரை மலர்கண்காட்சி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பூங்காவில் லட்சக்கணக்கான மலர்கள் பல்வேறு வண்ணங்களில் பூத்து குலுங்குகின்றன.

கொடைக்கானல் கோடை விழா
மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக இந்த வருடம் 13 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் உருவம் , 20 அடி நீளம் கொண்ட டைனோசர், சிங்சாங், ஸ்பைடர் மேன் மற்றும் கொய்மலர்களை கொண்டு தயார் செய்த மயில் மற்றும் புவிசார் குறியீடு பெற்ற மலைப்பூண்டு உள்ளிட்ட உருவங்களை மலர்களால் அமைக்கும் பணியில் பிரையண்ட் பூங்கா ஊழியர்கள் தற்போது மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் அன்னை
மேலும் காய்கறிகளை கொண்டு தமிழ் அன்னை உருவமும், அரசியல் கட்சி தலைவர்களையும் காய்கறிகளை கொண்டு தயார்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு அரசு துறைகள் சார்பில் கண்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. பிரையண்ட் பூங்காவில் அலங்கார வளைவு, மலர் அலங்கார மேடை, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்கம் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது, மேலும் இன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் வரை கோடை விழா நடைபெற இருப்பதும் குறிப்பிடதக்கது.

சுற்றுலா பயணிகள் உற்சாகம்
இந்த நிகழ்வில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி, உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகிய நான்கு அமைச்சர்கள் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று தொடங்கிய மலர்கண்காட்சியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் குவிந்துள்ளனர்.

தமிழன்னை சர்ச்சை
முன்னதாக தமிழன்னை சிலைக்கு பதிலாக அம்மன் சிலை வைக்கப்பட்டிருப்பதாகவும், காலடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் உருவத்தினை பழங்களில் வடிவமைத்து அம்மனின் காலடியில் வைத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்த படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அது அம்மன் சிலை இல்லை எனவும், தமிழன்னை சிலை என அதிகாரிகள் போர்டு வைத்தனர்.

உருவங்கள் அகற்றம்
இதனைக் கண்ட தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தமிழன்னையின் காலடியில் இருந்த கருணாநிதி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உருவம் பொறித்த பழங்களை எடுத்து தமிழன்னையின் அருகில் மாற்றி மாற்றி வைத்தனர். அதனை செய்தியாளர்கள் படம் பிடிப்பதை பார்த்து உடனடியாக அருகே வைக்கப்பட்டிருந்த கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் உருவம் பதித்த பழங்களை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அகற்றினர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications