Dindigul NIA raid: திண்டுக்கல்லில் திகுதிகு.. அதிகாலையில் களமிறங்கிய என்.ஐ.ஏ அதிகாரிகள்! 10 இடங்களில் அதிரடி ரெய்டு
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அதிகாலையில் என்ஐஏ அதிகாரிகள் ரெய்டில் இறங்கியுள்ளனர். எஸ்டிபிஐ மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா வீடு உட்பட 10 இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
திண்டுக்கல் பேகம்பூர் ஜின்னா நகர் பகுதியில் உள்ள எஸ்டிபிஐ மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா வீட்டிலும், ஒட்டன்சத்திரம் யூசுப் என்பவர் வீட்டிலும், வத்தலக்குண்டு பகுதியில் உமர் என்பவர் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். திண்டுக்கல்லில் கொடைக்கானல் பகுதியிலும், தென்காசி மாவட்டத்திலும் என்ஐஏ ரெய்டு மேற்கொண்டு வருகிறது.

ரெய்டு பின்னணி:
கடந்த 2019ம் ஆண்டு கும்பகோணம் திருப்புவனம் அருகே பாமக பிரமுகர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாகத்தான் தற்போது ரெய்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருபுவனம் மேலதூண்டில் விநாயகம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பாமக முன்னாள் நகரச் செயலாளராவார். சமையல் கான்ட்ராக்ட் மற்றும் சமையல் பொருட்களை வாடகைக்கு விடும் பணியை செய்து வந்திருந்தார். இவர் வசித்த பகுதியில் சிலர் மதமாற்றம் செய்வதாக சொல்லப்பட்டது. இது குறித்து இவர் சம்பந்தப்பட்டவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். பின்னர் அன்று இரவு கடையிலிருந்து வீடு திரும்பும் வழியில் மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டு அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவிடைமருதூர் போலீசார், குறிச்சிமலை பகுதியைச் சேர்ந்த முகமது ரியாஸ், திருபுவனத்தைச் சேர்ந்த நிஜாம் அலி, சர்புதீன், முகமது ரிஸ்வான், திருவிடைமருதூரைச் சேர்ந்த அசாருதீன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். மேலும் 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை என்ஐஏ அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. இதனையடுத்து வழக்கு என்ஐஏ கையில் எடுப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையின் ஒரு பகுதியாக தொடர் ரெய்டுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தற்போது திண்டுக்கல், தென்காசி என ரெய்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
திண்டுக்கல்லில் உடம்பெல்லாம் மூளை.. சிலிண்டர்களுடன் வந்த கேஸ் ஊழியர்.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா?












Click it and Unblock the Notifications