Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Dindigul NIA raid: திண்டுக்கல்லில் திகுதிகு.. அதிகாலையில் களமிறங்கிய என்.ஐ.ஏ அதிகாரிகள்! 10 இடங்களில் அதிரடி ரெய்டு

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அதிகாலையில் என்ஐஏ அதிகாரிகள் ரெய்டில் இறங்கியுள்ளனர். எஸ்டிபிஐ மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா வீடு உட்பட 10 இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

திண்டுக்கல் பேகம்பூர் ஜின்னா நகர் பகுதியில் உள்ள எஸ்டிபிஐ மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா வீட்டிலும், ஒட்டன்சத்திரம் யூசுப் என்பவர் வீட்டிலும், வத்தலக்குண்டு பகுதியில் உமர் என்பவர் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். திண்டுக்கல்லில் கொடைக்கானல் பகுதியிலும், தென்காசி மாவட்டத்திலும் என்ஐஏ ரெய்டு மேற்கொண்டு வருகிறது.

NIA Tamil Nadu

ரெய்டு பின்னணி:

கடந்த 2019ம் ஆண்டு கும்பகோணம் திருப்புவனம் அருகே பாமக பிரமுகர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாகத்தான் தற்போது ரெய்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருபுவனம் மேலதூண்டில் விநாயகம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பாமக முன்னாள் நகரச் செயலாளராவார். சமையல் கான்ட்ராக்ட் மற்றும் சமையல் பொருட்களை வாடகைக்கு விடும் பணியை செய்து வந்திருந்தார். இவர் வசித்த பகுதியில் சிலர் மதமாற்றம் செய்வதாக சொல்லப்பட்டது. இது குறித்து இவர் சம்பந்தப்பட்டவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். பின்னர் அன்று இரவு கடையிலிருந்து வீடு திரும்பும் வழியில் மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டு அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவிடைமருதூர் போலீசார், குறிச்சிமலை பகுதியைச் சேர்ந்த முகமது ரியாஸ், திருபுவனத்தைச் சேர்ந்த நிஜாம் அலி, சர்புதீன், முகமது ரிஸ்வான், திருவிடைமருதூரைச் சேர்ந்த அசாருதீன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். மேலும் 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை என்ஐஏ அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. இதனையடுத்து வழக்கு என்ஐஏ கையில் எடுப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையின் ஒரு பகுதியாக தொடர் ரெய்டுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தற்போது திண்டுக்கல், தென்காசி என ரெய்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+