"என் சாவுக்கு ஆய்வாளர் சுபகுமார்தான் காரணம்".. காவல் நிலையத்தில் எஸ்.ஐ தற்கொலை முயற்சி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காவல் ஆய்வாளர் திட்டியதால் மனமுடைந்த எஸ்ஐ தற்கொலைக்கு முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் தண்டிக்குடி காவல் நிலையத்தில் ஆய்வாளராக உள்ளவர் டி.சுபகுமார். இவர் நேற்று காலை அணிவகுப்பின்போது உதவி ஆய்வாளர் முருகேசனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.
இதனால் மனவேதனை அடைந்த முருகேசன் " என் சாவுக்கு ஆய்வாளர் சுபகுமார்தான் காரணம்" என அறிவிப்பு பலகையில் எழுதி வைத்துவிட்டு காவல் நிலையத்திலேயே தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
[ ஏன் வாய் மூடி அமைதி காக்கிறார் ஸ்டாலின்.. தமிழிசை கேள்வி ]
இதனால் அதிர்ச்சி அடைந்த சக காவலர்கள் முருகேசனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது முருகேசன் நலமாக உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே முருகேசனை தற்கொலைக்கு தூண்டிய ஆய்வாளர் சுபக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சக காவலர்கள் புகார் அளித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.