திண்டுக்கல் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் சுட்டுக் கொலை- பதுங்கிய 4 பேர் அதிரடி கைது!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் துப்பாக்கிச் சூடு நடத்தி இளைஞர் ஒருவரை படுகொலை செய்த சம்பவத்தில் திண்டுக்கல்லிலேயே பதுங்கி இருந்த 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
Recommended Video
திண்டுக்கல் மேற்கு மரியநாத புரத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் ராகேஷ் (வயது 26). இவர் அதே பகுதியில் உள்ள செட்டிகுளத்தில் மீன்பிடி குத்தகை எடுத்துள்ளார்.
இதற்கிடையே நேற்று நள்ளிரவில் குளக்கரையில் தனது நண்பர்களுடன் ராகேஷ் பேசிக் கொண்டிருந்தார். அதாவது மீன்பிடி குத்தகைக்கு எடுத்த குளத்தை காவல் காத்து கொண்டு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

சரமாரி துப்பாக்கி சூடு
அப்போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் ராகேஷ் உடன் தகராறு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த கும்பலில் இருந்த 2 பேர் திடீரென தாங்கள் வைத்திருந்த நாட்டு துப்பாக்கிகளால் ராகேஷை சரமாரியாக சுட்டனர். துப்பாக்கி குண்டுகள் அடுத்தடுத்து பாய்ந்த நிலையில் ராகேஷ் மயங்கி சரிந்து விழுந்தார்.

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் மரணம்
இதில் படுகாயமடைந்த ராகேஷை அவரது நண்பர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்ததில் ராகேஷின் வலது விலா எலும்பு, வயிற்றுப்பகுதி என ஆறு இடங்களில் துப்பாக்கி குண்டுகள் துளைத்த காரணத்தினால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மீன்பிடி குத்தகை முன்விரோதம்
இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி விஜயகுமாரி மற்றும் மாவட்ட எஸ்பி ஸ்ரீனிவாசன் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் ரூபி மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். முதற்கட்ட விசாரணையில் செட்டிகுளத்தில் மீன்பிடி குத்தகை எடுப்பதில் முன்விரோதம் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

5 தனிப்படை போலீசார் தேடுதல்
இதனிடையே துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்களை முதலில் 3 தனிப்படை போலீசார் தேடி வந்தனர். பின்னர் 5 தனிப்படை போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய நபர்களை தீவிரமாக தேடினர். இந்த தேடுதல் நடவடிக்கையில் திண்டுக்கல்லில் பதுங்கி இருந்த 4 பேரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications