திண்டுக்கல் ஆத்தூர் அணையில் நீரில் மூழ்கி 5 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு
Subscribe to Oneindia Tamil
செம்பட்டி: திண்டுக்கல் ஆத்தூர் அணையில் குளிதத 5 சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் நாகல் நகரை சேர்ந்த 6 சிறுவர்கள் இன்று ஆத்தூர் காமராஜர் நீர்தேக்கத்தில் குளிக்க இரு சக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவர்கள் அடுத்தடுத்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இச்சம்பவம் பற்றி அப்பகுதி பொதுமக்களிடம் உயிர் தப்பிய ஒரு சிறுவன் தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் செம்பட்டி போலீசார் ஆத்தூர் அணைக்கு சென்று சிறுவர்களின் உடல்களை தேடினர்.
நீண்ட நேர தேடுதலுக்குப் பின் 5 சிறுவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன. இந்த சம்பவத்தால் திண்டுக்கல் நாகல் நகர் பகுதியே பெரும் சோகத்தில் உறைந்து போயுள்ளது.












Click it and Unblock the Notifications