திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ பெரியசாமி மகள் இந்திரா வீட்டில் ரெய்டு.. கோவையில் இருந்து வந்த டீம்
திண்டுக்கல்: தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி மகள் இந்திரா வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை இன்று பிற்பகல் திடீரென வந்து சோதனை நடத்தினார்கள். கோவையில் இருந்து ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ஐந்து பேர் கொண்ட குழுவினர் வந்து சோதனை நடத்தினார்கள். தகவல் அறிந்து இந்திராவின் வீட்டின் முன்பு திமுக கட்சித் தொண்டர்கள் குவிந்து வருவதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், தி.மு.க.வின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான ஐ. பெரியசாமியின் மகள் இந்திரா துவாரக நாதன். இவரது கணவர் பெயர் துவாரக நாதன். இவர்கள் குடும்பத்துடன் திண்டுக்கல் ஆர் எம் காலணி அருகே உள்ள செவாலியர் சிவாஜி நகரில் வசித்து வருகின்றனர். இந்திராவின் சகோதரர் தான் ஐ.பி. செந்தில்குமார். இவர் பழனி சட்ட மன்ற உறுப்பினர் ஆவார்.

இன்று பிற்பகல் சோதனை
இந்நிலையயின் இந்திராவின் வீட்டில் இன்று 21.11.25 மதியம் 1:30மணி அளவில் கோவையில் இருந்து ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் ஐந்து பேர் கொண்ட குழு இரண்டு இனோவா கார்களில் இந்திராவின் வீட்டிற்கு வருகை தந்தனர். பின்னர் வீட்டுக்குள் சென்று சோதனை மேற்கொண்டனர், இந்த சோதனை ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்தது. தகவல் அறிந்து இந்திராவின் வீட்டின் முன்பு திமுக கட்சித் தொண்டர்கள் குவிந்து வருவதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

ஆகஸ்ட் மாதம் நடந்த சோதனை
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அமைச்சர் ஐ பெரியசாமி இல்லம், அமைச்சர் மகனும் பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஐபி செந்தில்குமார் வீடு மற்றும் இந்திரா வீடு, மற்றும் 3 வர்த்தக நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தது. தற்போது ஜிஎஸ்டி அதிகாரிகள் வந்து சோதனை நடத்தியுள்ளனர்.
இந்திரா யார்
அமைச்சர் ஐ பெரியசாமியின் மகள் இந்திரா துவாரக நாதன் திண்டுக்கல் நகரில் தொழில் அதிபராக இருக்கிறார். இவர் ஒரு டெக்ஸ்டைல்ஸ் தொழிற்சாலை நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது நிறுவனம் தனது தயாரிப்புகளை, குறிப்பாக ஆயத்த ஆடைகளை மேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
சோதனை ஏன்
எதற்காக சோதனை... சோதனையின் முடிவில் என்ன நடந்தது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அதிகாரிகள் அறிவித்தால் மட்டுமே முழு விவரம் தெரியவரும். ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு என்பது வரி ஏய்ப்பு, வரி விலக்கு மோசடி போன்றவற்றை விசாரிக்கும் ஒரு துறையாகும். இந்த துறை தான் இன்று சோதனை நடத்தியுள்ளது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் 15ம்தேதி நடந்த அமலாக்கத்துறை சோதனையின் போது, இந்திரா துவாரக நாதனின் வீட்டில் மட்டும் சுமார் 15 மணி நேரம் சோதனை நடந்தது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications