குப்பைக்கு போன ஜெயலலிதா படம்! அமைச்சர் நிகழ்ச்சியில் அதிர்ச்சி! கொந்தளிக்கும் அதிமுக..பறந்த கண்டனம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் புகைப்படத்தை குப்பையில் வீசிய அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதா படம் அவமதிக்கப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக புதிய மின் கோட்டங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. பொது மக்களுக்கு தடையற்ற மின் சேவையை வழக்கும் வகையில் மின்வாரியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மின் பகிர்மான கோட்ட அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார்.

மேலும் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள், திமுகவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மின் பகிர்மான கோட்ட அலுவலகத்தை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார். முன்னதாக அந்த அலுவலகத்தில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் இருந்தது. திமுக அமைச்சர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் ஜெயலலிதாவின் படத்தை அப்புறப்படுத்தியுள்ளனர் மின்வாரிய அதிகாரிகள்.
அதிர்ச்சி தரும் விதமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அலுவலகத்திற்கு பின்புறம் இருந்த குப்பை தொட்டியில் வீசி உள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் அதிமுகவினர் கடும் கொந்தளிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் அமைச்சரின் நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சரின் புகைப்படம் அவமதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களிலும் கண்டனம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் புகைப்படம் அவமதிக்கப்பட்டதற்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்," மறைந்தும் மக்கள் உள்ளங்களில் வாழும் இதயதெய்வம் மாண்புமிகு அம்மா அவர்களை அவமானப் படுத்திய ஸ்டாலின் அரசுக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும் கடும் கண்டனம்.
மின் பகிர்மான கோட்ட அலுவலகத்தில் உள்ள மாண்புமிகு அம்மா அவர்களின் புகைப்படங்களை குப்பைத் தொட்டியில் வீசினால், மாண்புமிகு அம்மா அவர்களின் சாதனைகளை மறைத்துவிட முடியுமா? 2006-11 திமுக ஆட்சியில் இருண்டிருந்த தமிழ்நாட்டை, ஒளிரூட்டியவர் மாண்புமிகு அம்மா அவர்கள். மின்வெட்டு தமிழ்நாட்டை, மின்மிகை மாநிலமாக்கியவர்.
ஆட்சிக்கு வந்தது முதல் மின் கட்டண உயர்வை மட்டும் சரியாக செய்யும் இந்த கையாலாகாத ஸ்டாலின் மாடல் திமுக அரசின் அவமானச் செயலுக்கு, தமிழ்நாட்டு மக்களுடன் இணைந்து மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையிலான அஇஅதிமுக தக்க பதிலை 2026-ல் தரும்." என கூறியுள்ளார்.
-
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
குடும்ப தலைவிகளுக்கு பிரிட்ஜ் இலவசம்.. அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா?












Click it and Unblock the Notifications