பழனி முருகன் கோவிலில் துர்கா ஸ்டாலின் தரிசனம்! கூடவே வலம் வந்த மெர்சி செந்தில்குமார்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினை பொறுத்தவரை ஆன்மிகத்தில் அதிகம் நாட்டம் உடையவர். தமிழ்நாடு முழுவதும் கோவில் கோவிலாக சென்று வழிபடக்கூடியவர். துர்கா ஸ்டாலின் தனது கொள்கைக்கு நேர் எதிரானவர் என்றாலும் கூட, தனிநபர் சுதந்திரத்தில் ஸ்டாலின் தலையிட்டதில்லை. அவரது ஆன்மிக பயணத்திற்கு ஒரு போதும் தடை போட்டதில்லை.

குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலினுடன் எந்த ஊருக்கு சுற்றுப்பயணம் சென்றாலும் அந்த ஊரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு விசிட் அடிக்க தவறமாட்டார் துர்கா ஸ்டாலின். இதனிடையே இன்றைய தினம் பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்து மனமுருக வழிபட்டார். அவருடன் அவரது தங்கை ஜெயந்தி, பழனி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மனைவி மெர்சி ஆகியோர் கோவிலுக்கு வந்திருந்தனர்.
துர்கா ஸ்டாலினின் பழனி வருகை குறித்த தகவல் லோக்கல் கட்சிக்காரர்களுக்கு கூட தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேவையற்ற கூட்டம் கூடும் என்பதால் இந்தத் தகவல் தெரிவிக்கப்படவில்லையாம். ரோப் கார் மூலம் மலைக்கு சென்ற துர்கா ஸ்டாலினை கோவில் நிர்வாகத்தினர் வரவேற்று அழைத்துச் சென்றனர். முன்னதாக துர்கா ஸ்டாலின் வருகையையொட்டி கோவிலில் முன்னேற்பாடுகளை மெர்சி செந்தில்குமார் செய்து வைத்திருந்தார்.
பழனி முருகன் கோவில் பிரசாதங்களை பெற்றுக்கொண்ட துர்கா ஸ்டாலின் மீண்டும் ரோப் கார் மூலம் மலையிலிருந்து இறங்கி காரில் புறப்பட்டுச் சென்றார். இதனிடையே இந்த நிகழ்வு முடிந்து புறப்படும் போது மெர்சி செந்தில்குமார் குடும்ப விவகாரங்கள் சிலவற்றை துர்கா ஸ்டாலினிடம் மனம் விட்டு பகிர்ந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications