56 கிலோ தங்கம்.. ரூ. 95 கோடி பணம்.. ஒரே ஒரு டைரியால் சிக்கிய பழனி சித்தனாதன் & கந்த விலாஸ்!
சித்தனாதன் மற்றும் கந்த விலாஸ் குழுமத்திற்கு தொடர்பான நிறுவனங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத 95 கோடி ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பழனி: சித்தனாதன் மற்றும் கந்த விலாஸ் குழுமத்திற்கு தொடர்பான நிறுவனங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத 95 கோடி ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பழனியில் உள்ள சித்தனாதன் மற்றும் கந்த விலாஸ் குழுமம் உலகப் புகழ்பெற்றது. சித்தனாதன் மற்றும் கந்த விலாஸ் குழுமங்கள்தான் பழனி பஞ்சாமிர்தம் உலகம் முழுக்க பிரபலம் அடைய முக்கிய காரணமாக அமைந்தது.
அதேபோல் இவர்கள் விபூதி, பிரசாதம் உள்ளிட்ட பூஜை சாமான்களையும் விற்பனை செய்து வருகிறார்கள். இவர்களின் குழுமத்தில் கடந்த வாரம் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது.

சித்தனாதன் எப்படி
சித்தனாதன் மற்றும் கந்த விலாஸ் குழுமம் சிவநேசன், அசோக்,ரவி, செந்தில் ஆகிய நான்கு சகோதரர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 200 பேர் கொண்ட பெரிய கூட்டு குடும்பம் இந்த தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. திமுக தலைவர்கள் சிலரின் வீட்டில் பெண் கொடுத்தும், பெண் எடுத்தும் திருமண பந்தங்களை கூட இவர்கள் செய்துள்ளனர்.

வருமான வரித்துறை
இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி முதல் வரிமான வரித்துறையினர் கடை உரிமையாளர்களின் வீடுகள், குடோன்கள், அலுவலகங்களில் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர். மொத்தம் 250 அதிகாரிகள் இப்படி அதிரடி சோதனையில் இறங்கினார்கள். முதல் நாள் சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை.

டைரி
இந்த நிலையில் நேற்று முதல் நாள் நடந்த சோதனையில் அதிரடி திருப்பமாக 56 கிலோ தங்கம், 2 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் கட்டுக்கட்டாக பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அங்கு 5 நாட்களாக சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது

ஆச்சர்யம்
இந்த நிலையில்தான் அவர்களின் வீட்டில் இருந்து முக்கியமான டைரி ஒன்றி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த டைரி மூலம் சித்தனாதன் மற்றும் கந்த விலாஸ் குழுமத்திற்கு தொடர்பான நிறுவனங்களின் கணக்கில் வராத 95 கோடி ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த டைரியில் பணம் பதுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்துள்ளது.












Click it and Unblock the Notifications