Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடைக்கானல் போறீங்களா.. தலைகீழாக மாறிய கொடை ரோடு ரயில் நிலையம்.. இது எவ்வளவு முக்கியம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு என அழைக்கப்படும் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையம் ஆங்கிலேயர் காலத்தில் சுற்றுலா பயணிகளுக்காகவே உருவாக்கப்பட்ட இந்தியாவில் பாரம்பரிய "ஏ" கிரேட் ரயில் நிலையங்களில் ஒன்றாகும். கொரோனா காலத்திற்கு பின் அந்த ரயில் நிலையமும், அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரமும் அடியோடு முடங்கி உள்ளது.

கொடைக்கானல், மூணாறு, இடுக்கி, தேக்கடி, கம்பம் மற்றும் தேனி திண்டுக்கல் மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு வெளிநாடுகள், வெளிமாநில, வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் எளிதில் வந்து செல்ல வசதியாக உள்ள கொடைரோடு இரயில் நிலையத்தில் கொரோனா காலத்திற்கு முன்புவரை விரைவு, அதிவிரைவு, சிறப்பு ரயில்கள் உட்பட 23 ரயில்கள் நிறுத்தப்பட்டன.

people request More trains should stop at Kodai Road Railway Station for kodaikanal

கொரோனா தடைகாலம் முடிந்து இயல்பு நிலை திரும்பி, தற்போதுவரை வெறும் மூன்று ரயில்கள் மட்டுமே நிறுத்தபடுவதால் இந்த ரயில்நிலையத்தில் சுற்றுலா பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இதனால் இந்த ரயில் நிலையத்தை நம்பி இருந்த 100க்கணக்கான டாக்ஸி ஓட்டுநர்கள், வியாபாரிகள், பொதுமக்கள், மாணவ மாணவியர் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

இதுபற்றி அந்த ஊரைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சுந்தர்ராஜன் கூறுகையில், ஆங்கிலேயர் காலத்தில், கொடைக்கானல், தேனி மற்றும் கேரளாவின் மலைப் பகுதிகளுக்கு செல்லவும், வடமாநிலங்களுக்கு செல்லவும் ஆங்கிலேயர்கள் மற்றும் பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டதால் கொடைரோடு முக்கியமான ரயில் நிலையமாக இருந்தது. 4 நடைமேடைகளுடன், ஏ கிரேட் ரயில் நிலையமாக பல்வேறு வசதிகளுடன் இருந்த இந்த கொடைரோடு ரயில் நிலையத்தில், கொரோனா காலத்திற்கு முன்பு தேஜஸ், குருவாயூர், நெல்லை, முத்துநகர், பொதிகை, ஹவுரா, கொல்லம், பாண்டியன் மற்றும் சிறப்பு ரயில்கள் என 16 முதல் 22 ரயில்கள் வரை நிறுத்தப்பட்டன. இப்போது பாண்டியன் எக்ஸ்பிரஸ் மற்றும் மைசூர் எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் தான் நிற்கிறது.

people request More trains should stop at Kodai Road Railway Station for kodaikanal

தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் விளையும் ஏலக்காய், காபி, உள்பட பல்வேறு பொருட்கள் கொடைரோடு ரயில் நிலையம் மூலமாகவே வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. வடமாநில வியாபாரிகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் என பலரும் வந்ததால் எப்போதும் பிஸியாக இருந்த இந்த ரயில் நிலையத்தில் கொரோனாவிற்கு பின் பெரும்பாலான ரயில்கள் நிற்கவில்லை. திண்டுக்கல்லில் மட்டுமே எல்லா ரயில்களும் நிற்கின்றன. வெறும் 3 ரயில்கள் தான் நின்று செல்கின்றன என்று வேதனையுடன் தெரிவித்தார்.

கொடைக்கானல் சீசன் தொடங்கிவிட்ட நிலையில், ஏராளமான மக்கள் கார்களிலும்,ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலம் செல்கிறார்கள். கொடை ரோட்டில் ரயில்கள் நிற்பது இல்லை என்பதால், கொடைக்கானலுக்கு வர விரும்புவோர் ரயிலில வந்தால் திண்டுக்கல் நகரிலேயே இறங்கி அங்கிருந்து டாக்ஸிகள் மூலம் கொடைக்கானல் செல்கிறார்கள்.

இதேபோல் தேனி, கம்பம், போடி, தேக்கடி, மூணாறுக்கு சுற்றுலா செல்பவர்கள் திண்டுக்கல் ரயில் நிலையத்திலேயே இறங்கி செல்கிறார்கள். இதன் காரணமாக கொடை ரோடு ரயில் நிலையம் சுத்தமாக வெறிச்சோடி காணப்படுகிறது. இப்படியே சென்றால் கொடை ரோடு ரயில் நிலையத்தை மூடும் நிலை ஏற்படும் என்றும் மக்கள் வேதனையுடன் கூறுகிறார்கள்.

people request More trains should stop at Kodai Road Railway Station for kodaikanal

பழையபடி அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுத்தால் கொடைரோட்டை சுற்றியுள்ள பகுதிகள் மேம்படும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கொடை ரோடு அருகே நிலக்கோட்டை , வத்தலக்குண்டு, வாடிப்பட்டி என பகுதிகள் உள்ளன. சுமார் 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் கொடைரோடு ரயில் நிலையத்தை நம்பி இருந்தன.

இப்போது இந்த மக்கள் மதுரைக்கோ அல்லது திண்டுக்கல் நகருக்கோ செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். கொடை ரோடு ரயில் நிலையத்தை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற அந்த பகுதி மக்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+