பாமக ராமலிங்கம் கொலை.. 5 ஆண்டுக்கு பின் திண்டுக்கல்லில் என்ஐஏவிடம் சிக்கிய முக்கிய நபர்! யார் இவர்?
திண்டுக்கல்: தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனத்தில் கடந்த 2019ல் பாமக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக என்ஐஏ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் குற்றவாளிகளுக்கு தங்க இடம் கொடுத்ததாக கூறி திண்டுக்கல் பூம்பாறையை சேர்ந்த ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனம் என்ற ஊர் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பாமகவில் செயல்பட்டு வந்தார். பாமகவின் முன்னாள் நகர செயலாளராக பொறுப்பு வகித்து இருந்தார். ஒருபுறம் பாத்திரக்கடை தொழில் செய்த ராமலிங்கம் அரசியலிலும்கவனம் செலுத்தி வந்தார்.

இதற்கிடையே தான் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் மதமாற்றம் செய்வதை ராமலிங்கம் கண்டித்ததும், அதனால் ஏற்பட்ட பிரச்சனையில் தான் அவர் கொல்லப்பட்டு இருப்பதாகவும் குற்றச்சாட்ட எழுந்தது தான்.
இதையடுத்து இந்த வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் 18 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில் 10 பேர் கைதான நிலையில் 5 பேர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர். அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா (39), கும்பகோணம் மேலக்காவேரியைச் சேர்ந்த அப்துல் மஜீத்(42), வடக்குமாங்குடியைச் சேர்ந்த புர்ஹானுதீன்(33), திருவிடைமருதூரைச் சேர்ந்த ஷாஹூல் ஹமீத்(32), திருமங்கலக்குடியைச் சேர்ந்த நஃபீல் ஹாசன்(33) ஆகியோர் தலைமறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் இவர்கள் 5 பேர் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.25 லட்சம் பரிசாக வழங்கப்படும் என என்ஐஏ அறிவித்துள்ளது. ஒருவருக்கு தலா ரூ.5 லட்சம் என மொத்தம் 5 பேருக்கு ரூ.25 லட்சம் பரிசு தொகையாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இத்தகைய சூழலில் தான் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக என்ஐஏ அதிகாரிகள் ஒருவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அவரது பெயர் முகமது அலி ஜின்னா. இவர் திண்டுக்கல் பூம்பாறையை சேர்ந்தவர். இவரை தேடப்படும் குற்றவாளியாக என்ஏஐ அறிவித்த நிலையில் தற்போது திண்டுக்கல் பூம்பாறையில் பதுங்கி இருந்த அவரை என்ஐஏ அதிகாரிகள் தட்டித்தூக்கி உள்ளனர். ம ராமலிங்கம் கொலை நடந்து தற்போது 5 ஆண்டுகள் ஆகும் நிலையில் முகமது அலி ஜின்னா தற்போது என்ஐஏ அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார். தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் இன்னும் 4 பேர் தலைமறைவாக உள்ளனர். கும்பகோணம் மேலக்காவேரியைச் சேர்ந்த அப்துல் மஜீத்(42), வடக்குமாங்குடியைச் சேர்ந்த புர்ஹானுதீன்(33), திருவிடைமருதூரைச் சேர்ந்த ஷாஹூல் ஹமீத்(32), திருமங்கலக்குடியைச் சேர்ந்த நஃபீல் ஹாசன்(33) ஆகியோர் இன்னும் என்ஐஏ அதிகாரியிடம் சிக்கவில்லை. இவர்கள் பற்றிய விபரங்களை என்ஐஏ அதிகாரிகளிடம் பொதுமக்கள் நேரடியாக தெரிவிக்கலாம்.
அப்படி தெரிவிப்போருக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். இந்த தகவலை 'தேசிய புலனாய்வு முகமை, எண் 10, மில்லர்ஸ் சாலை, புரசைவாக்கம், சென்னை 600010 என்ற முகவரிக்கு தெரிவிக்கலாம். இல்லாவிட்டால் 94999 45100, 99623 61122, 044 2661 5100 என்ற எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இல்லாவிட்டால் [email protected] என்ற மெயில் ஐடி மூலம் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விபரம் ரகசியமாக வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications