Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்டர் கொடுத்தது ஓகே..’கலைஞர்’ வீட்டுக்கு 20 ஆயிரம் லஞ்சம்! அமைச்சரிடமே புலம்பும் உபிகள்..பாமக பகீர்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் கட்டும் பயனாளிகளுக்கு கட்டுமான பணி ஆணைகளை வழங்கப்பட்டுள்ள நிலையில், கலைஞர் தொகுப்பு வீடு திட்டத்தில் வீடு வாங்குவதற்கு 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்குவதாக திமுகவினரே அமைச்சர் ஐ . பெரியசாமியிடம் குற்றச்சாட்டு வைக்கும் அவல நிலை நிலவுகிறது என பாமக மாநில பொருளாளர் திலகபாமா புகார் தெரிவித்துள்ளார்.

நேற்று முன் தினம், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் கட்டும் பயனாளிகளுக்கு கட்டுமான பணி ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Thilagabama I Periyasamy PMK Dindigul


இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பின்னர் கலைஞரின் கனவு இல்லம் கட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பணி ஆணையினை வழங்கினார்.

அப்போது திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு 1256 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல வீடு திட்டம் கட்ட ஆணை வழங்கி உள்ளதாகவும், அதேபோல் ஆத்தூர் தொகுதி முழுவதும் சுமார் 2000க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியிருந்தார்.

இந்நிலையில் கலைஞர் தொகுப்பு வீடு திட்டத்தில் வீடு வாங்குவதற்கு 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்குவதாக திமுகவினரே திமுக அமைச்சர் ஐ . பெரியசாமியிடம் குற்றச்சாட்டு வைக்கும் அவல நிலை நிலவுகிறது என பாமக மாநில பொருளாளர் திலகபாமா புகார் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக ஆல்வின் அமல பிரசன்னா என்பவரை பாமக மாநில பொருளாளர் திலகபாமா அறிமுகப்படுத்தினார். ‌‌ மேலும் இந்த செயற்குழு கூட்டத்தில் , திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஜாக்பாட் என்ற பெயரில் நடைபெற்று வரும் ஆன்லைன் லாட்டரிகளை தடை செய்ய வேண்டும் , திண்டுக்கல்லில் அடிக்கடி நிகழும் சாலை விபத்துகளில் திண்டுக்கல் மருத்துவமனை யில் அனுமதித்த பிறகு அவர்களை அப்படியே மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர் , எனவே திண்டுக்கல்லிலேயே மேல் சிகிச்சை செய்யும் அளவிற்கு சிறந்த மருத்துவ குணம் கொண்ட மருத்துவ குழுவினரை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Thilagabama I Periyasamy PMK Dindigul


இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசிய திலகபாமா,” திண்டுக்கல்லில் அதிக அளவு லாட்டரி சீட்டு விற்பனை அதிகரித்து வருகின்றது இதனை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல் மாநகராட்சியில் சுமார் நாலரை கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று கூறுகின்றனர் , கையாடல் செய்யப்பட்ட மக்களின் வரிப்பணம் மீண்டும் அரசுக்கு வந்து சேர திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

அதேபோல ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தொகுதியான ஆத்தூர் பகுதியில் கலைஞர் தொகுப்பு வீடு திட்டத்தின் கீழ் வீடு வாங்குபவர்களிடம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்குவதாக திமுக நிர்வாகி திமுக அமைச்சரிடமே புகார் அளிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். லஞ்சம் பெற்றவர்கள் யார் என விசாரணை நடத்தி, யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+