அமலாக்கத்துறை வலையில் "திமிங்கலம்"? திண்டுக்கல் ரத்தினம், ராமச்சந்திரன் வீடுகளில் 2-ம் நாளாக ரெய்டு!
சென்னை: மணல் குவாரிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன், சென்னை ஆடிட்டர் சண்முகராஜா வீடுகளில் இன்று 2-வது நாளாக சோதனையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மணல் குவாரிகளில் முறைகேடுகள் நடைபெறுவதால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது என்பது புகார். இந்தப் புகார்களின் அடிப்படையில் தமிழ்நாட்டில் நேற்று மணல் குவாரி ஒப்பந்ததாரர்களான திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் வீடுகள், அவர்களது நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில் ஆடிட்டர் சண்முகராஜன் வீடு, நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

மேலும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மணல் குவாரிகளுக்குள் நுழைந்தும் அமலாக்கத்துறை சோதனை நடந்தது. சென்னை எழிலகத்தில் கனிமவளத்துறை அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரி0கள் சோதனை நடத்தினர்.
மணல் குவாரி முறைகேடுகளை இலக்கு வைத்து தமிழ்நாடு முழுவதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கருத்து தெரிவிக்கையில், எனக்கு எந்த தகவலும் தெரியாது என கூறியிருந்தார்.
இந்நிலையில் திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன், ஆடிட்டர் சண்முகராஜன் வீடுகளில் இன்று 2-வது நாளாகவும் சோதனை தொடருகிறது.












Click it and Unblock the Notifications