சமூக செயற்பாட்டாளர் திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை பால்பாஸ்கர் காலமானார்
திண்டுக்கல்: சமூக செயற்பாட்டாளரான திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் பால்பாஸ்கர் (வயது 62) மாரடைப்பால் இன்று காலமானார்.
திண்டுக்கல் அமைதி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநரான பால் பாஸ்கர், கிராமப்புற ஏழைகளுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தார். குறிப்பாக நூற்பாலைகளில் பணிபுரியும் பெண்கள், வெளிமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு விவகாரங்களில் அக்கறையுடன் செயல்பட்டார்.

ஏழை மாணவர்களின் கல்விக்காக கல்வி நிறுவனங்களையும் உருவாக்கி நடத்தி வந்தார். 2011 சட்டசபை தேர்தலில் திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் பாமகவின் வேட்பாளராகப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் 47817 வாக்குகளுடன் 2-ம் இடம் பெற்றவர் பால் பாஸ்கர்.
மத்திய அரசின் நிதி ஆயோக் நிலைக் குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார் பால்பாஸ்கர். கொரோனா லாக்டவுன் காலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் முடங்கி இருந்த வெளிமாநில இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தமது அமைதி அறக்கட்டளை மூலம் உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை இடைவிடாது வழங்கினார் பால்பாஸ்கர்.
புதன்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட மாரடைப்பில் பால்பாஸ்கர் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள், சமூக இயக்கங்கள் இரங்கல் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications