பழங்குடிகளுக்கு சாதிச்சான்று வழங்குவதில் தாமதம்... தலைமை செயலாளருக்கு மனித உரிமை ஆணையம் சம்மன்!
சென்னை: பழங்குடியினரின் வாரிசுகளுக்கு சாதிச்சான்று வழங்க தாமதப்படுத்திய புகாரில் தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆஜராக மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
திண்டுக்கல், பழனி வருவாய்கோட்டாட்சியர்களும் மார்ச் 9-ல் ஆஜராக சம்மன் அனுப்பபட்டு உள்ளது.
பழங்குடியினரின் வாரிசுகளுக்கு சாதிச்சான்றுகள் உள்ளிட்ட சான்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வழங்குவதை பழங்குடியினரின் வாரிசுகளுக்கு சாதிச்சான்று வழங்குவதை அதிகாரிகள் தாம்படுத்தியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதனை மாநில மனித உரிமை ஆணையம் தீவிரமாக விசாரித்தது.

இந்த நிலையில் பழங்குடியினருக்கான சாதி சான்று வழங்காதது குறித்த புகாரில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மார்ச் 9-ம் தேதி ஆஜராக வேண்டும் என மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. இதேபோல் திண்டுக்கல், பழனி வருவாய்கோட்டாட்சியர்களும் ஆஜராக மாநில மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சில நாட்களுக்கு முன்பு பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications