திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெறும் 19 வயசு.. இந்த அம்மாவுக்கு 34 வயசு.. பிளாஸ்டிக் கவரை முகத்தில் மூடி.. தேவியின் திருவிளையாடல்

கணவனை கொன்ற மனைவி கைதானார்

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: அவருக்கு 19 வயசு.. இந்த அம்மாவுக்கு 34 வயசு.. ஏடாகூடமாக பழகிய விவகாரம், கடைசியில் அப்பாவி கணவரை இரக்கமே இல்லாமல் கொலை செய்யும்வரை வந்துவிட்டது..!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்துள்ள கீரனூரை சேர்ந்தவர் தண்டபாணி.. இவருக்கு 35 வயதாகிறது.. மனைவி பெயர் தேவி.. 34 வயதாகிறது.. ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்..

கணவன் மனைவி இருவரும் தாராபுரத்தில் பழ வியாபாரம் செய்து வந்தனர்.. தள்ளுவண்டி வியாபாரம் இது.. தாராபுரத்தில் வியாபாரம் செய்துவிட்டு, நைட் நேரத்தில் கீரனூர் சென்றுவிடுவார்கள்.

 கீரனூர்

கீரனூர்

சில சமயம், தண்டபாணி மட்டும் கீரனூர் செல்வார்.. தேவியின் வீடு அங்கேயே தாராபுரத்தில் உள்ளதால், அங்கு போய் படுத்து கொள்வார். இந்நிலையில், கடந்த 14ம் தேதி, தேவி மட்டும் கீரனூர் வந்தார்.. தண்டபாணி வரவில்லை... இதனால் தண்டபாணி எங்கே என்று அக்கம் பக்கத்தினர் கேட்டுள்ளனர்.. அவர் வெளியூர் போயிருப்பதாக தேவி அவர்களிடம் காரணம் சொன்னார்..

 விசாரணை

விசாரணை

அதேசமயம், அன்றைய தினமே கீரனூர் ஸ்டேஷனில் கணவனை காணவில்லை என்றும் புகார் தந்தார்.. போலீசாரும் விசாரணையை ஆரம்பித்தனர்.. ஆனால்,ஆரம்பத்தில் இருந்தேதேவி மீது சந்தேகம் வந்தது.. அதனால், தண்டபாணியை தேடுவதை விட்டுவிட்டு, தேவியை விசாரிக்க ஆரம்பித்தனர்.. அப்போதுதான், தேவியின் மொத்த திருவிளையாடலும் தெரியவந்தது.

 வியாபாரம்

வியாபாரம்


தன் அம்மா வீட்டு பக்கத்திலேயே அபிஷேக் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார்.. இவருக்கு வெறும் 19 வயசுதான் ஆகிறதாம்.. நைட் நேரத்தில் வியாபாரத்தை முடித்து கொண்டு, வீட்டுக்கு வரும் வழியில்தான் அபிஷேக்கை சந்தித்துள்ளார் தேவி.. ஆனால், அம்மா வீட்டுக்கு நேராக போகாமல், அபிஷேக்கை கூட்டிக் கொண்டு அந்த பகுதியில் தனிமையில் இருந்து வந்துள்ளார்..

கொலை

கொலை

சில சமயம் இதற்காகவே வியாபாரத்தை சீக்கிரமாக முடித்து கொண்டு வருவாராம் தேவி.. இந்த விஷயம் தண்டபாணிக்கு தெரியவரவும், தேவியை கண்டித்துள்ளார்.. ஆனாலும் தேவி கேட்கவில்லை.. சம்பவத்தன்றுகூட, அபிஷேக்கை கீரனூர் வீட்டுக்கு வரவழைத்துள்ளார் தேவி... இதை தண்டபாணி கண்ணாலேயே பார்த்துவிட்டார்.. இதனால் கள்ள ஜோடி இரண்டுமே டென்ஷன் ஆகிவிட்டனர்.. தண்டபாணி அபிஷேக்கை தாக்க, இருவரும் சேர்ந்து தண்டபாணியை தாக்கி உள்ளனர்.

 கைது

கைது

உடனே தேவி, கீழே கிடந்த ஒரு பிளாஸ்டிக் பை எடுத்து தண்டபாணி முகத்தை மூடிவிட்டார்.. அப்படியே கயிறு போட்டும் கட்டிவிட்டார்.. பிறகு ஒரு இரும்பு கம்பி எடுத்து சரமாரி தாக்கினார்.. இறுதியில், சடலத்தை மூட்டை கட்டி, ஒரு பாழடைந்த கிணற்றில் தூக்கி விசிவிட்டனர்.. இவ்வளவையும் தேவி தன்னுடைய வாக்குமூலமாக போலீசாரிடம் சொன்னார்.. இப்போது கள்ள ஜோடி 2 பேரும் கைதாகி உள்ளனர்.

English summary
Wife killed husband near Dindigul due to family issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X