கண்ணே தெரியலை.. அப்பிய புகை.. காட்டு தீயில் சிக்கிய வாயில்லா ஜீவன்கள்.. அனலில் கொடைக்கானல்!
கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டுள்ளது
திண்டுக்கல்: என்ன காரணம் என்றே தெரியவில்லை.. கொடைக்கானல் காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தவே முடியவில்லை.. மிக வேகமாக வனப்பகுதி முழுவதும் நேற்றில் இருந்து இந்த பரவி வருவதுடன் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. பார்ப்பதற்கு அன்று அமேசான் காடு எரிந்ததை போலவே உள்ளது!!
Recommended Video
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று மலைகளின் அரசி கொடைக்கானல்.. இங்கு கோவில்பட்டி வனப்பகுதியில் காட்டுத்தீ திடீரென பரவி வருகிறது.
இந்த காட்டுத்தீயானது வனப்பகுதியின்அருகில் இருக்கும் தனியார் வருவாய் நிலத்தில்தான் ஏற்பட்டுள்ளது... பின் இது மெல்ல தோட்டங்களுக்கும்.. கடைசியில் காட்டுப்பகுதிக்கும் பரவியுள்ளது.

அரிய வகை
இந்த காட்டுப்பகுதியில்தான் ஏராளமான மூலிகை மரங்கள் உள்ளன.. இந்த மூலிகை மரங்களும், செடிகளும் மிக மிக அரிதாக கிடைப்பவையாகும்.. இந்த மூலிகை மரங்கள் மொத்தமாக கருகிவிட்டன... அதேபோல இக்காடுகளில் உயிர் வாழும் வன விலங்குகளும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதுதான் பெருத்த அதிர்ச்சி ஆகும். நேற்று மதியானத்தில் இருந்து இந்த தீயின் வேகம் அதிகமாகிவிட்டது.

மூச்சுதிணறல்
இதனால் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது... இதனால் மலைக்கிராம மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.. இந்த தீ பரவ என்ன காரணம் என தெரியவில்லை.. ஆனால் வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது.. அந்த காட்டில் இருந்த விலங்குகள்கூட சாப்பாடு, தண்ணீர் தேடி ஊருக்குள்தான் வந்துபோகின்றன.. அந்த வகையில் அவை எல்லாம் எங்கே என இன்னும் தெரியவில்லை.

காட்டுத்தீ
கோடைகாலம் ஆரம்பித்துவிட்டாலே இப்படி காட்டுத் தீ பரவுவது இயல்புதான் என்றாலும், அரிய மூலிகை மரங்கள், செடிகள் கருகியதை நினைத்து கிராம மக்கள் கலங்குகிறார்கள்.. தீப்பற்றி எரிகிற இடம், ஆட்கள் செல்ல முடியாத பகுதி ஆகும். அதனால் காட்டுத்தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் தீயை அணைக்க வனத்துறையினரும், தீயணைப்பு படையினரும் அங்கு வரவேயில்லை.

நவீன கருவிகள்
தொடர்ந்து அங்கு தீ எரிந்து கொண்டிருக்கிறது. தானாக அணைந்தால் மட்டுமே இந்த காட்டுத்தீ முடிவுக்கு வரும் என்ற சூழல் உள்ளது.. இது ஒரு பெரிய கொடுமை ஆகும்.. உயிருள்ள வனவிலங்குகள், அரியவகை மூலிகை, மரம், செடிகளை கூட நம்மால் உடனடியாக காப்பாற்ற நிலை ஏற்பட்டுள்ளது... இப்படி கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க, நவீன கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்பதே நம்முடைய உடனடி எதிர்பார்ப்பாகும்!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications