செல்ஃபி மோகம்! புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் மாயமான இளைஞர்.. பாறைகளுக்கிடையே அழுகிய நிலையில் மீட்பு
திண்டுக்கல்: செல்பி மோகத்தால் திண்டுக்கல் மாவட்டம் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த இளைஞர் ஒரு வாரம் கழித்து சடலமாக மீட்கப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மேலசத்திரத்தை சேர்ந்தவர் நாகநாதசேதுபதி. அவருடைய மகன் அஜய் பாண்டியன் (28). இவர் திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் படித்துள்ளார். கடந்த 3-ஆம் தேதி அன்று ராமநாதபுரம் சத்திரத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் (25), அஜய் பாண்டியனை பார்க்க மங்களம்கொம்பு பகுதிக்கு வந்திருந்தார்.
தேனி, திண்டுக்கல், திருப்பூரில் மிக கனமழை..இடி மின்னலுடன் 5 நாட்களுக்கு வெளுத்து வாங்குமாம்!
ஆடி பெருக்கு
இந்த நிலையில் நேற்று முன் தினம் ஆடி பெருக்கு அதாவது ஆடி 18-ஐ யொட்டி இவர்கள் 2 பேரும் பெரும்பாறை அருகே உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றுள்ளனர். அங்கு கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் புல்லாவெளி அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
அஜய் பாண்டியன்
இதை பார்த்த அஜய் பாண்டியன் இதை ரீல்ஸ் எடுக்க முடிவு செய்தார். இதற்காக அஜய் பாண்டியன் நீர் வீழ்ச்சி பகுதியில் உள்ள பாறையில் நின்று போஸ் கொடுக்க அதை கல்யாண சுந்தரம் வீடியோவாக எடுத்துக் கொண்டிருந்தார். இதையடுத்து ஒவ்வொரு பாறையாக இறங்கி கைகளை மேலே உயர்த்தி அஜய் போஸ் கொடுத்து வந்தார்.
ஈரமான பாறை
ஒரு கட்டத்தில் ஈரமான பாறையில் நின்றாக அப்போது ஒரு காலை இன்னொரு கால் மேல் லேசாக மடக்கி நின்றது போல் கைகளை தூக்கி போஸ் கொடுத்தார். உடனே அஜய் பாண்டியனால் பேலன்ஸ் செய்ய முடியாததால் பாறையில் இருந்து விழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் ஆர்ப்பரிக்கும் அருவிக்குள் தவறி விழுந்தார்.
வீடியோ எடுத்த நண்பர்
வீடியோ எடுத்த நண்பர் பதறி அடித்துக் கொண்டு அய்யோ டேய் மச்சான் என அலறினார். பின்னர் உடனே ஊர் மக்களிடமும் போலீஸாரிடமும் நடந்தவற்றை கூறினார். அஜய் பாண்டியனின் நிலை என்னவானது என தெரியவில்லை. தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் திண்டுக்கல் மாவட்ட போலீஸார் தேடி வந்தனர்.
தீயணைப்பு துறையினர்
திண்டுக்கல், ஆத்தூர், ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு போன்ற பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு தீயணைப்பு துறையினர் இளைஞரை தேடி வந்தனர். தண்ணீரின் வரத்து அதிகரிப்பு, அதிக ஆழம் உள்ளிட்டவைகளால் தேடும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஒரு வார கால தேடலுக்குப் பிறகு புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் மாயமான இளைஞரின் உடல் மீனாட்சி ஊத்து என்ற இடத்தில் பாறைகளுக்கு இடையே அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.