அமீரகத்தில் அடித்த அதிர்ஷ்டம்.. ஒரே நாளில் 45 கோடி ரூபாய்க்கு அதிபதியான இந்தியர்
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் லாட்டரி வாங்கிய இந்தியருக்கு ரூ.45 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஜூ என்பவருக்கு 20,000,000 திர்ஹாம் பரிசு விழுந்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள புஜேராவில் கேரளாவைச் சேர்ந்த 39 வயதாகும் ஸ்ரீஜு கடந்த 11 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் அங்குள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தில் ஆப்ரேட்டராக வேலை செய்கிறார். இவருக்கு இரண்டு இரட்டை குழந்தைகள் உள்ளன.

இவருக்கு சமீபத்தில் அமீரகத்தில் உள்ள தனியார் நிறுவனம் நடத்திய அதிர்ஷ்ட லாட்டரி குலுக்கலில் 2 கோடி திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ.45 கோடி) பரிசு விழுந்துள்ளது. இதை கேட்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளார் ஸ்ரீஜு.
லாட்டரியை பொறுத்தவரை யாராவது ஒருவருக்கு மட்டுமே அதிர்ஷ்டம் அடிக்கும். குடிசையில் இருப்பவரை கோபுரத்திற்கு அழைத்து செல்லும், ஆனால் பெரும்பாலும் மக்களை வறுமையில் அதிர்ஷ்டத்தை மட்டும் பணத்தையும் லாட்டரியில் தொலைப்பது நடக்கும். யாராவது ஒருவர் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகும் சம்பவம் அதிசயமாக நடப்பதும் உண்டு.
அப்படித்தான் கேரளாவைச் சேர்ந்த 39 வயதாகும் ஸ்ரீஜுக்கு அதிர்ஷ்டம் கொட்டி உள்ளது. இந்தியாவில் அல்ல, அமீரகத்தில் நடந்துள்ளது. அண்மைக்காலமாக அமீரகத்தில் தொடர்ந்து இந்தியர்கள் அதிக அளவில் லாட்டரி அதிர்ஷ்ட குலுக்கல்களில் பங்கேற்று பரிசுகளை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று 154வது 'மஹ்ஸூஸ் சாட்டர்டே மில்லியன்ஸ்' அதிர்ஷ்டச்சீட்டுக் குலுக்கலில் ஸ்ரீஜுக்கு 45 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. வேலை செய்து கொண்டிருந்த ஸ்ரீஜு தனக்கு கிடைத்த பரிசு தொகையை பற்றி கேள்விப்பட்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனார்.
இதுபற்றி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், "காரில் ஏறி அமர்ந்த நான், அதை இயக்குவதற்கு முன் எனது மஹ்ஸூஸ் கணக்கைப் பார்த்தேன். என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. எனக்குப் பரிசு விழுந்திருப்பதைக் கண்டேன். ஒரு நிமிடம் என்ன செய்வதெனத் தெரியாமல் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போனேன். நான் வென்றது உண்மைதானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அதிகாரபூர்வ தொலைபேசி அழைப்பு வரும்வரை காத்திருந்தேன். பணம் வந்தது உறுதியானது. இந்த பரிசுப்பணத்தைக் கொண்டு, இந்தியாவில் ஒரு வீடு வாங்கத் திட்டமிட்டுள்ளேன் " இவ்வாறு கூறினார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications