குவைத் தீ விபத்தில் 7 தமிழர்கள் உட்பட 45 இந்தியர்கள் பலி! உயிரிழந்தோர் விவரத்தை வெளியிட்ட மத்திய அரசு
குவைத்: குவைத் தீ விபத்தில் 45 இந்தியர்கள் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் பெயர், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்தியர்கள் பலரும் வெளிநாடுகளுக்குக் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று வேலை செய்து வரும் பழக்கம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. சம்பளம் அதிகம், வேலை நிச்சயம் உள்ளிட்ட காரணங்களால் இவர்கள் அதிகளவில் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கிறார்கள்.

அப்படி இந்தியர்கள் அதிகம் செல்லும் நாடுகளில் ஒன்றாக குவைத் இருக்கிறது. பல லட்சம் இந்தியர்கள் குவைத் நாட்டில் தங்கி பல்வேறு வேலைகளைச் செய்து வருகின்றனர்.
அதன்படி குவைத்தின் மங்காப் நகரில் இந்தியர்கள் பலரும் வேலை செய்து வருகிறார்கள். இதுபோல வேலை செய்ய வரும் வெளிநாட்டினர் தங்கவே அங்குப் பிரதான குடியிருப்புகளும் உள்ளன. அப்படி அங்குள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் தான் நேற்றைய தினம் தீ விபத்து ஏற்பட்டது. இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு கேரளாவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்குச் சொந்தமானது எனக் கூறப்படுகிறது.
இந்தியாவில் இருந்து குவைத் மங்காப் நகருக்கு வேலை தேடிச் செல்லும் தொழிலாளர்கள் அங்குத் தங்கி பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்றைய தினம் திடீரென தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பில் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தரைதளத்தில் சமையலறையில் பிடித்த தீ மளமளவெனப் பரவியிருக்கிறது.
இந்த விபத்தில் இதுவரை சுமார் 50 உயிரிழந்துள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பலருக்கும் தீ காயம் மோசமாக இருப்பதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த தீ விபத்தில் இந்தியர்கள் மட்டும் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதை மத்திய அரசு இப்போது உறுதி செய்துள்ளது. மேலும், அவர்களின் விவரங்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. உயிரிழந்தோரின் பெயர், பாஸ்போர்ட் விவரம், சிவில் ஐடி நம்பர். அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
இவர்களில் பெரும்பாலானோர் கேரளா, தமிழ்நாடு, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். மேலும், உபி, பீகார், ஒடிசா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களும் இதில் உயிரிழந்துள்ளனர்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள உயிரிழந்தோர் விவரம்:


-
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
ஹோட்டல்களுக்கு குட் நியூஸ்..! 23ஆம் தேதி முதல் கூடுதல் வணிக சிலிண்டர்கள்.. மத்திய அரசு அறிவிப்பு! -
கோடை மழைக்கு எண்ட் கார்டு.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்! இனிதான் சம்பவம் இருக்கு -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல்












Click it and Unblock the Notifications