கடுமையாக சீறிய தோனி.. வைடு கொடுக்காமல் 'பம்மிய' அம்பயர்.. துடித்துப் போன வார்னர்
துபாய்: அம்பயர் வைடு காட்டுவதற்காக கையை விரிக்க முயல, தோனி அதைப் பார்த்து கடும் கோபம் கொள்ள.. பாதியிலேயே கையை மூடிக் கொண்டார் நடுவர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் தான் இப்படி ஒரு பரபரப்புச் சம்பவம் நடந்தது.
19-வது ஓவரை தாக்கூர் வீசிக் கொண்டிருந்தார். அந்த ஓவரின் 2-வது பந்தை ரஷித் கான் சந்தித்தார். அவர் அதற்கு முந்தைய ஓவரில் நல்ல அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த பிளேயர்.
போட்ட திட்டமெல்லாம் வேஸ்ட்.. வார்னரின் ஸ்பின் அட்டாக்கை உடைத்த சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர்ஸ்ட்ரோக்!

வைடு பந்து
எனவே அவர் விளாசி விடுவார் என்பதற்காக பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே அகலமாக வீசினார் தாக்கூர். அந்தப் பந்து வைடு என்பது தெளிவாக தெரிந்தது. அதற்கு முன்பாக ஒரு பந்தையும் அவ்வாறுதான் அவர் வீசி நடுவர் வைடு கொடுத்து இருந்தார். இந்த பந்துக்கும் நடுவர் திரும்பி கையை அகலமாக விரித்து வைடு என்று சொல்வதற்கு முயற்சி செய்தார்.

தோனி கோபம்
அப்போது தோனி கடும்கோபம் கொண்டவராகக் காணப்பட்டார். முறைத்தபடியே நடுவரை பார்த்து ஏதேதோ சொன்னார். வைடு இல்லை என்பது போல கையை விரித்துக் காட்டினார். இதைப்பார்த்த நடுவர் அப்படியே வைடு கொடுக்காமல் திரும்பிவிட்டார். இதை வெளியே உட்கார்ந்து இருந்து பார்த்துக் கொண்டு இருந்த ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் டென்ஷன் ஆகி விட்டார். என்ன நடக்கிறது என்று கையை அகற்றி அதிருப்தி வெளிப்படுத்தினார்.

முக்கிய திருப்பம்
ஆனால் அதில் வைடு வரவில்லை. 1 ரன்னும் போச்சு. ஒரு பந்து வீணானது. இது ஹைதராபாத் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. அந்த ஓவரில் சிறப்பாக அடித்து இருந்தால், ஹைதராபாத் அணி வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்த சர்ச்சை காரணமாக ஹைதராபாத் அணி அடிக்க வேண்டிய ரன் இலக்கு இன்னும் அதிகரித்துக் கொண்டே சென்று இறுதியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வியை தழுவியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

வெற்றிக்கான வேகம்
தோனி வழக்கமாக மிகவும் கூல் கேப்டன் என்று அறியப்படுபவர். ஒரு சில நேரங்களில் மட்டும் இதுபோல மைதானத்தில் கடும் டென்சன் ஆவதை ரசிகர்கள் பார்த்துள்ளனர். அதிலும் இன்றைய போட்டியை எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்ற முனைப்பு தோனியின் முகத்தில் காணப்பட்டது.

தோனி உத்வேகம் தேவை
இதற்கு முன்பும் சில ஓவர்கள் ஆகவே பவுலர்களிடம் கடுமை காட்டினார். முகத்தில் கொஞ்சம் கூட சிரிப்பு இல்லை. அந்த அளவுக்கு தீவிரம் காட்டியதால் தான் சென்னை அணி வெற்றி பெற்றது என்பது வேறு விஷயம். இதே முனைப்போடு இனிவரும் போட்டிகளிலும் சென்னை அணி விளையாடி வெற்றியை தட்டிப் பறிக்க வேண்டும் என்பதுதான் சிஎஸ்கே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications