தேமுதிக 16ஆம் ஆண்டு துவக்கவிழா - ரத்ததானம் செய்த துபாய் நிர்வாகிகள்
தேமுதிக அமீரக பிரிவு துபாய் சார்பாக நமது கட்சியின்16ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சிறப்பு இரத்ததானம் முகாம் நடைபெற்றது
துபாய்: தேமுதிக அமீரக பிரிவு துபாய் சார்பாக நமது கட்சியின்16ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சிறப்பு இரத்ததானம் முகாம் நடைபெற்றது. தேமுதிக உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர் இதனை அங்கீகரிக்கப்படும் வகையில் அமீரகத்தின் துபாய் சுகாதார துறையின் DHA சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் கடந்த 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 15ஆம் தேதியன்று சென்னையில் தேமுதிக அலுவலகத்தில் கட்சித்தலைவர் விஜயகாந்த் கொடியேற்றி வைத்தார்.

தேமுதிகவினர் மாநிலம் முழுவதும் பல ஊர்களில் துவக்கவிழாவை கொண்டாடி வருகின்றனர். நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
தேமுதிக அமீரக பிரிவு துபாய் சார்பாக நமது கட்சியின்16ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சிறப்பு இரத்ததானம் முகாம் நடைபெற்றது. இதில் அமீரக துணை செயலாளர் K.மாரிமுத்து அவர்களின் ஆலோசனைபடி அமீரக பிரிவு துபாய் துணை செயலாளர்கள் ஆரூர் S.சகிலன் நெல்லை R.தவசி முருகன் மற்றும் அமீரக பிரிவு இளைஞர் அணி செயலாளர் வி.இராஜசேகர் தலைமை தாங்கினார். தேமுதிக உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர் இதனை அங்கிகரிக்கப்படும் வகையில் அமீரகத்தின் துபாய் சுகாதார துறையின் DHA சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது இதனை அமீரக துணைச் செயலாளர் நெல்லை R.தவசி முருகன். இளைஞர் அணி செயலாளர் வி.இராஜசேகர். மற்றும் அமீரக பிரிவு நிர்வாகி அருண். ஆகிய மூவரும் பெற்றுக்கொண்டனர்.












Click it and Unblock the Notifications