"யாரும் வாடகை பற்றி கவலைப்படாதீங்க.." துபாய் & அபுதாபியிடம் இருந்து வந்த முக்கிய அறிவிப்பு
துபாய்: ஈரான் போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கில் விமானச் சேவை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரம் பயணிகள் அங்கிருந்து கிளம்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் சூழலில், துபாய் மற்றும் அபுதாபி அரசுகள் இது தொடர்பாக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது அங்குச் சிக்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்குப் பேருதவியாக இருக்கும்.
மத்திய கிழக்கில் இப்போது போர் சூழல் ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் அமெரிக்கா- இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரானைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஏற்கனவே ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டுள்ள நிலையில், தாக்குதலை இரு நாடுகளும் தீவிரப்படுத்தியுள்ளது. அடுத்து 4 வாரங்களுக்குத் தாக்குதல்கள் தொடரும் என டிரம்ப் கூறியிருக்கிறார்.

உச்சக்கட்ட பதற்றம்
இது ஒரு பக்கம் இருக்க.. மற்றொருபுறம் ஈரானும் பதிலடி தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள அனைத்து அமெரிக்க ராணுவ தளங்களையும் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுக்க ஒருவித பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், இதனால் அங்கு விமானச் சேவையும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
விமானங்கள் ரத்து
சர்வதேச பயணிகளுக்கு, குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பியப் பயணிகளை, ஆசிய நாடுகள் உடன் இணைக்கும் ஒரு ஹப்பாக ஐக்கிய அமீரகம் இருக்கும் சூழலில், அங்கு விமானச் சேவை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமீரகத்தில் இருந்து சுமார் 1500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே விமான ரத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு உதவும் வகையில் ஐக்கிய அமீரகம் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது துபாய், அபுதாபி உள்ளிட்ட நகரங்களில் சிக்கியுள்ளவர்களை ஹோட்டலில் இருந்து காலி செய்யும்படி வற்புறுத்தக் கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச பயணிகள்
விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பல ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கேட்கும் நாள் வரை தங்க அனுமதிக்குமாறு ஹோட்டல்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்த முடியாத பயணிகளின் விவரத்தை அரசுக்கு அளித்தால்.. அரசே அவர்களுக்கான ஹோட்டல் கட்டணத்தைச் செலுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேசப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
சுற்றுலாப் பயணிகளின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அவர்கள் தொடர்ச்சியாகத் தங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என இந்த வழிகாட்டுதல்கள் அறிவுறுத்தியுள்ளன. பயண தடையால் நாட்டை கிளம்ப முடியாமல் சிக்கியுள்ள பயணிகளால் ரூம் வாடைகையை செலுத்த முடியாமல் போகும்போது, அறைகளை காலி செய்யுமாறு வற்புறுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
துபாய்
துபாயைப் பொறுத்தவரை இது தொடர்பாகத் துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் பாதிக்கப்பட்ட விருந்தினர்கள் எந்த ரூமில் முதலில் புக் செய்து இருந்தனரோ.. அதே ரூம்களில் அவர்களைத் தங்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது நிலவும் அசாதாரண சூழல் காரணமாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு ஹோட்டல்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களால் உடனடியாக வாடகை செலுத்த முடியவில்லை என்றாலும் காலி செய்யச் சொல்லக்கூடாது என்றும் கூடுதல் டைம் தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அபுதாபி
அபுதாபி அதிகாரிகளும் கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளனர். அதிலும் அபுதாபி அதிகாரிகள் இது ஒரு படி மேலே சென்று, சிக்கித் தவிக்கும் விருந்தினர்களுக்கான தங்குமிட செலவுகளை அரசு ஏற்கும் என்று உறுதி செய்துள்ளது. விமானச் சேவை சீராகி விருந்தினர்கள் கிளம்பும் வரை அங்கேயே தங்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூடுதல் நாட்களுக்கு ஆகும் செலவுகளை அபுதாபி அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தியா டூ ஈரான்.. புறப்பட்ட ஈரான் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்.. பின்னணி -
ஈரான் இப்படி அடிக்கும்னு.. டிரம்ப் நினைச்சிருக்க மாட்டார்! வதம் செய்யப்பட்ட அமெரிக்காவின் பேட்ரியாட் -
2ம் உலகப்போருக்கு பின் USA பயன்படுத்தாத.. அந்த ஒரு ஆயுதத்தை! இந்திய பெருங்கடலில் பயன்படுத்தியது ஏன்? -
ஈரானை பார்த்து நடுங்கிய டிரம்ப்! அவசரமாக இந்தியா கையில் எடுத்த வெட்டுக்கிளி ஆயுதம்! ரெடியான சேஷ்நாக் -
ஈரானில் கண்ட்ரோலை எடுக்கும் மௌஜ்தபா கமேனி.. புதிய சுப்ரீம் லீடராக மறைந்த கமேனி மகன் தேர்வு -
சாரி டைம் முடிஞ்சு போச்சு! இனி பேச்செல்லாம் இல்ல.. ஸ்ட்ரெய்ட்டா வீச்சு தான்! டொனால்ட் ட்ரம்ப் அதிரடி -
Iran War: இந்தியாவை நெருங்கிய போர்? இந்திய பெருங்கடல் அருகே மூழ்கிய ஈரான் போர்க்கப்பல்.. 30 மாலுமிகளை மீட்ட இலங்கை -
அமெரிக்கா குண்டு போட்டது ஈரான் மேல இல்ல.. தங்கத்து மேல! மார்க்கெட் எப்படி அதிர போகுதுனு பாருங்க! -
இருளில் மூழ்கிய ஈராக்.. ஈரான் போரால் கடும் பாதிப்பு! சிக்கலில் வளைகுடா நாடுகள்! -
24 நாட்களில்.. அடியோடு காலியாகும் இந்தியாவின் கச்சா எண்ணெய் கையிருப்பு! விஸ்வரூபம் எடுத்த பிரச்சனை -
48 மணி நேரங்களில் 8 நாடுகளுக்கு போன் போட்ட பிரதமர் மோடி! ராஜதந்திர நடவடிக்கை தீவிரம் -
ஈரான் இஸ்ரேல் போர் பதற்றம்: நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி அடியோடு பாதிப்பு! 2 கோடி முட்டைகள் தேக்கம்! -
ஈரான் தலைவர்களை தட்டித் தூக்க.. இஸ்ரேல் மொசாட்டின் ‘ஸ்கெட்ச்’.. பற்களில் Spy சிப்? கேமரா ஹேக்கிங்? -
போரில் ஈரானை கைவிட்ட இந்தியா.. இஸ்ரேல் - அமெரிக்காவின் பக்கம் சாய்ந்த மோடி? இதை கவனிச்சீங்களா -
கொடைக்கானலில் குட்டி இஸ்ரேல் வட்டக்கானலில் தமிழக அரசு அதிரடி














Click it and Unblock the Notifications