துபாய் வாழ் இந்தியர்களுக்கு.. வரப்பிரசாதமாக வந்த புதிய சட்டம்! என்னன்னு பாருங்க!

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாய் உட்பட ஐக்கிய அமீரகம் முழுவதும் இந்த மாதம் முதல் புதிய சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. இதில் வேலை வாய்ப்பு தொடர்பான சட்டம் இந்தியர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. என்ன சட்டம் அது? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

துபாயில் தொழிலாளர் சட்டத்தில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்த புதிய சட்டத்தின்படி, வேலையை விட்டு விலகும் தொழிலாளர்கள் அல்லது ஒப்பந்தம் முடிந்தவர்கள் குறித்துப் புதிய தெளிவுபடுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது ஒப்பந்தம் முடிந்த பிறகு அல்லது இரு தரப்பு ஒப்புதலுடன் வேலையை மாற்றிக்கொள்ளலாம். மட்டுமல்லாது வேலை மாறுவதற்கான 'கிரேஸ் பீரியட்' 30 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Dubai

துபாயின் இந்த புதிய தொழிலாளர் சட்ட மாற்றங்கள் அங்கு பணிபுரியும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு மிகப்பெரிய நன்மையை அளிக்கின்றன. குறிப்பாக கிரேஸ் பீரியட் நீட்டிப்பு என்பது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

என்ன மாற்றம்?

முன்பு ஒரு தொழிலாளர் வேலையை விட்டு நின்றால் அல்லது நிறுவனம் அவரை வேலையை விட்டு நீக்கினால், அவர் நாட்டை விட்டு வெளியேற வெறும் 30 நாட்கள் மட்டுமே அவகாசம் இருந்தது. ஆனால் தற்போது இந்த புதிய சட்டம் இந்த கால அவகாசத்தை நீட்டித்திருக்கிறது. அதாவது, இப்போது இது 60 நாட்கள் முதல் 180 நாட்கள் (6 மாதங்கள்) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், அவசர அவசரமாக ஊருக்குத் திரும்ப வேண்டிய அவசியம் இல்லை. நிதானமாக மற்றொரு வேலையைத் தேடவோ அல்லது தனது பணப் பலன்களை முறையாகப் பெற்றுச் செல்லவோ போதுமான நேரம் கிடைக்கும். அதேபோல விசா மாறுதலும் ஈஸியாகும்.

விசா மாறுதல் எளிதாகும்

முன்பு இருந்த Ban முறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. தொழிலாளரும் அவர் பணியாற்றும் நிறுவனமும் பேசி முடிவெடுத்தால், பழைய நிறுவனத்திடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறுவதில் இருந்த சிக்கல்கள் இப்போது குறைக்கப்பட்டுள்ளன. இது திறமையான இந்தியத் தொழிலாளர்கள் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு சிறந்த நிறுவனத்திற்கு அதிக ஊதியத்திற்கு மாறுவதை எளிதாக்குகிறது.

இந்தியர்கள் நிம்மதி

முன்பெல்லாம், விசா காலம் முடிந்துவிடுமோ, அபராதம் கட்ட நேரிடுமோ என்ற பயம் இந்தியத் தொழிலாளர்களிடையே அதிகம் இருக்கும். ஆனால் இந்த புதிய சட்டம் மூலம் 6 மாதங்கள் வரை அவகாசம் இருப்பதால், சட்டவிரோதமாகத் தங்கும் நிலை குறையும். இது அங்குள்ள இந்தியர்களின் மன நலனுக்கும், சட்ட ரீதியான பாதுகாப்பிற்கும் பெரிய பலம் சேர்க்கிறது.

ஒருவேளை துபாயை விட்டு இந்தியா திரும்ப முடிவு செய்தாலும், அவசரமின்றி தனது சேமிப்பு, வங்கி கணக்குகள் மற்றும் இதர விவகாரங்களை முறையாக முடித்துவிட்டு வரலாம். அந்த வகையில் இந்த சட்டம் இந்தியர்களுக்கு வரப்பிரசாதமாக மாறியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+