துபாயில் தாயை இழந்து தவித்த கைக்குழந்தை... தமிழகத்தில் உள்ள தந்தையிடம் அனுப்பி வைத்த அமீரக திமுக..!

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் கொரோனா தொற்றுக்கு தாயை பறிகொடுத்த 10 மாத கைக்குழந்தையை ஐக்கிய அரபு அமீரக திமுகவினர் தமிழகத்தில் உள்ள அதன் தந்தையிடம் பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர்.

UAE Dmk sent 10 month old baby to Tamil Nadu

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வேலவன் என்பவர் தனது மனைவி பாரதியை கடந்த மார்ச் மாதம் துபாய்க்கு அனுப்பி வைத்திருக்கிறார். அங்கு சென்ற பாரதி தமிழகத்தை சேர்ந்த பெண்களுடன் தங்கி தனக்கு வேலை தேடி வந்துள்ளார். இதனிடையே துபாய்க்கு செல்லும் போது தனது 10 மாத கைக்குழந்தையையும் தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கிறார் பாரதி. இந்நிலையில் வேலை தேடி சென்றவருக்கு கடந்த மே மாதம் கொரோனா தொற்று உறுதியானது.

UAE Dmk sent 10 month old baby to Tamil Nadu

இதையடுத்து மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பாரதி, மே 29-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பாரதியின் குழந்தையை தமிழகத்தை சேர்ந்த ஜெரினா என்பவர் துபாயில் பராமரித்து வந்துள்ளார். இந்த தகவல் ஐக்கிய அரபு அமீரக திமுக அமைப்பாளர் எஸ்.எஸ்.மீரானுக்கு கிடைத்ததை அடுத்து, உடனடியாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார். அதன் பேரில் மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள பாரதியின் கணவர் வேலவனிடம் குழந்தையை ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்றன. 15 நாட்களாக தமிழக அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாக இன்று 10 மாத கைக்குழந்தை துபாயிலிருந்து திருச்சிக்கு அழைத்து வரப்பட்டு அதன் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.

UAE Dmk sent 10 month old baby to Tamil Nadu

திருச்சியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் தஸ்லீம் என்பவர், திருச்சி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய குழந்தையை பெற்று அதன் தந்தை வேலவனிடம் முறையாக ஒப்படைத்தார். மேலும், துபாயில் தகனம் செய்யப்பட்ட பாரதியின் அஸ்தியும் அவரது கணவர் வேலவனிடம் ஒப்படைக்கப்பட்டது. கண்ணீர்மல்க தனது குழந்தையை பெற்றுக் கொண்ட கள்ளக்குறிச்சியை சேர்ந்த வேலவன், தன்னுடையை குழந்தையை தன்னிடம் கொண்டு வந்து சேர்த்த தமிழக அரசுக்கும், அமீரக திமுக அமைப்பாளர் மீரானுக்கும் என்றும் தாம் கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

UAE Dmk sent 10 month old baby to Tamil Nadu

இதனிடையே கொரோனாவுக்கு தாயை பறிகொடுத்த இந்த குழந்தைக்கு தமிழக அரசின் சமூகநலத்துறை சார்பில் மூன்று லட்ச ரூபாய் வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் ஐக்கிய அரபு அமீரக திமுக அமைப்பாளர் மீரானிடம் உறுதியளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+