பொழைக்கப் போன இடத்துல கைய கால வச்சுட்டு சும்மா இருக்கனும்! 17 இந்தியர்களை கொத்தாக தூக்கிய அமீரகம்!
துபாய்: இஸ்ரேல் - ஈரான் - அமெரிக்கா போர் காரணமாக மத்திய கிழக்கில் போர் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், போர் தொடர்பாக சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பியதாகக் கூறி 19 இந்தியர்கள் உட்பட மொத்தம் 35 பேரை கைது செய்ய ஐக்கிய அரபு அமீரகம் உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை அமீரகத்தின் அரசு செய்தி நிறுவனம் எமிரேட்ஸ் நியூஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும், தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எனவும் எச்சரித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக இஸ்ரேல் - ஈரான் - அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்து வருகிறது. இந்த மோதலின் தாக்கம் வளைகுடா நாடுகளுக்கும் பரவி வருவதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த சூழலில் உலகளவில் முக்கியமான எண்ணெய் வர்த்தக மையங்களில் ஒன்றாகக் கருதப்படும் புஜைரா போர்ட் துறைமுகத்தில் தாக்குதல் நடந்ததாக வெளியான தகவலும் சர்வதேச எண்ணெய் சந்தையில் கவலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அமீரக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதேவேளை, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி பதற்றத்தை மேலும் அதிகமாக்கியுள்ளது.
ஈரான் இஸ்ரேல் போர்
இந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானும் தாக்குதலை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் சில இராணுவ தளங்களையும் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் வளைகுடா பகுதியில் உள்ளபஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்பு நிலைமையும் இந்த மோதலால் பதற்றமாக மாறியுள்ளது. இந்நிலையில் அமீரகத்தின் முக்கிய எண்ணெய் வர்த்தக மையமான புஜைரா துறைமுகத்தில் நடந்ததாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
போலி போர் வீடியோ
இதுமட்டுமல்லால் துபாய் விமான நிலையம் அருகே நடத்தப்பட்டுள்ள தாக்குதல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், போர் தொடர்பாக சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பியதாகக் கூறி 19 இந்தியர்கள் உட்பட மொத்தம் 35 பேரை கைது செய்ய ஐக்கிய அரபு அமீரகம் உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை அமீரகத்தின் அரசு செய்தி நிறுவனம் எமிரேட்ஸ் நியூஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் , இஸ்ரேல் - ஈரான் - அமெரிக்கா போர் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், இணைந்து தாக்குதல் நடத்தி வரும் சூழலில், அந்த போரைச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியான காணொலி காட்சிகள் உருவாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
யுஏஇ நடவடிக்கை
இத்தகைய பதிவுகள் பொதுமக்களை தவறாக வழிநடத்தக்கூடியவை என்றும், சமூக அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவை என்றும் அமீரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அட்டா்னி ஜெனரல் ஹமாத் சைஃப் அல் ஷாம்ஸ் வெளியிட்ட அறிக்கையில், பொது அமைதி மற்றும் ஒழுங்கை குலைக்கும் நோக்கத்துடன் தவறான தகவல்களை பரப்பியதாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அமீரகம் இந்தியர்கள் கைது
அதன்படி 17 இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 பேரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 இந்தியர்கள் உட்பட இன்னும் 10 பேரையும் கைது செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் அமீரக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சிறைத் தண்டனை
குறிப்பாக பொய்யான தகவல்கள் அல்லது தவறான காணொலி காட்சிகளை வெளியிட்டு பொதுமக்களை தவறாக வழிநடத்தினால் குறைந்தது ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். அதோடு குறைந்தபட்சம் 1 லட்சம் திர்ஹம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.25.20 லட்சம்) அபராதமும் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கிளைமாக்ஸ் இல்லாத இஸ்லாமாபாத் ‘த்ரில்லர்’: ரிட்டர்ன் ஆன ஜே.டி. வேன்ஸ்.. ஈரான் போர் முடியாது? -
அமெரிக்கா vs ஈரான்.. இஸ்லாமாபாத்தில் நடக்கும் 'மைண்ட் கேம்'. மிரட்டிய ட்ரம்ப்! பேச்சுவார்த்தை தோல்வி -
ஈரானுக்கு ரகசிய ஆயுத சப்ளை செய்யும் சீனா.. ஆனா ரூட்டு வேற.. கொந்தளிக்கும் அமெரிக்க உளவுத்துறை! -
அமைதி பேச்சுவார்த்தையின் முக்கிய கட்டம்.. பாக்., பிரதமரை சந்தித்த அமெரிக்க துணை அதிபர்! -
ஈரானுக்கு திரும்ப கிடைக்க போகும் மிகப்பெரிய சொத்துக்கள்.. அமெரிக்கா சம்மதித்தது ஏன்? -
40 நாள் வெறியாட்டம்.. ஈரானை பந்தாடிய இஸ்ரேல் எவ்வளவு செலவு செய்தது..? பரபர தகவல் வெளியானது! -
திடீரென அமெரிக்க துணை அதிபர் விமானத்தை சூழ்ந்த போர் விமானங்கள்.. பாகிஸ்தான் வான் எல்லையில் பரபரப்பு! -
லெபனான்-க்கு விடிவுகாலம்? டிரம்ப் செய்த போன் கால்.. இஸ்ரேல் நெதன்யாகு முக்கிய முடிவு! -
உலகமே தேடும் பாகிஸ்தானின் செரீனா ஹோட்டல்.. ஈரான் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு தேர்வானது எப்படி? -
ஈரான் போர் ஆரம்பித்த பின் முதல் முறை நல்ல சம்பவம்.. ஹார்முஸை கடந்த 2 அமெரிக்க போர்க்கப்பல்கள் -
பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் பல்பு கொடுக்கும் ஈரான்.. ஒரே கண்டிஷன் - டிரம்ப்-க்கு அடுத்த செக் -
படிச்சு படிச்சு சொன்ன டிரம்ப்.. கேட்காத இஸ்ரேல்! லெபனானில் மீண்டும் தீவிர தாக்குதல்.. ஓயாத பதற்றம்












Click it and Unblock the Notifications