விவாகரத்து வதந்தி.. சானியா மிர்சாவும் நானும் இதற்காகத்தான் ஒன்றாக இல்லை.. மனம் திறந்த சோயிப் மாலிக்
துபாய்: சானியா மிர்சா - சோயிப் மாலிக் நட்சத்திர ஜோடிக்க்கு இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக விவாகரத்து செய்ய இருப்பதாகவும் வதந்திகள் பரவி வரும் நிலையில், முதல் முறையாக சோயிப் மாலிக் தனது மவுனத்தை கலைத்துள்ளார்.
இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. கடந்த பிப்ரவரி மாதம் டென்னிஸ் போட்டிகளில் இருந்து சானியா மிர்சா ஓய்வு பெற்றுள்ளார்.

ஐதராபாத்தை சேர்ந்த சானியா மிர்சா, கடந்த 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சோயிப் மாலிக்கை மணந்து கொண்டார். எல்லை தாண்டிய இந்த காதல் ஜோடிகள் திருமணம் முடிந்த பிறகும் பரஸ்பரம் தங்கள் நாட்டுக்காக தொடர்ந்து சர்வதேச தொடர்களில் பங்கேற்றனர்.
துபாயில் வசித்து வரும் இந்த நட்சத்திர ஜோடிகளுக்கு இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் சமீப காலமாக பரவி வருகின்றன. இதற்கு ஏற்றார் போல் சானியா மிர்சாவும் தனது இன்ஸ்டாகிராமில் சில பதிவுகளை வெளியிட்டு வந்தார். குறிப்பாக "உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன... அல்லாவைக் நாடி.." என்று கடந்த ஆண்டு சானியா மிர்சா பதிவிட்டது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
அதேபோல தொடர்ந்து பல பதிவுகளை சானியா மிர்சா பதிவிட்டு வந்தார். அதேபோல், தனது மகன் உடனான இருக்கும் படங்களை மட்டுமே சானியா மிர்சா பதிவிட்டது வதந்திகளுக்கு வலு சேர்ப்பதாக இருந்தது. இந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையின் போதும் இருவரும் தனித்தனியாகவே இருந்தது விவாகரத்து பற்றிய வதந்தி மீண்டும் பரவ காரணமாக அமைந்தது.

இந்த நிலையில் தான், சோயிப் மாலிக் முதல் முறையாக விவாகரத்து பற்றிய வதந்திகளுக்கு மவுனம் கலைத்துள்ளார். இது குறித்து சோயிப் மாலிக் கூறியதாவது;- ரம்ஜான் பண்டிகையை சானியா மிர்சாவுடன் தான் செலவிட வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் சில பணிகள் இருப்பதால் அது முடியவில்லை.
சானியா மிர்சா ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதால் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதன் காரணமாகவே நாங்கள் ஒன்றாக ரம்ஜான் கொண்டாட முடியவில்லை. ஆனால் நெருக்கமானவர்களை அதிகம் மிஸ் செய்யும் நாள் ரம்ஜான் பண்டிகை' என்று கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே விவாகரத்து பற்றிய வதந்திகளுக்கு எந்த ஒரு கருத்தையும் சானியா மிர்சாவோ.. சோயிப் மாலிக்கோ கருத்து எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்த நிலையில் தங்களுக்குள் பிளவு எதுவும் இல்லை என்று சோயிப் மாலிக் கூறியிருப்பது அவர்களது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications