அட.. ச்சீ.. ஆன்லைனில் ஆர்டர் செய்தது வாட்ச்.. வந்ததோ காண்டம்.. அதுவும்..! அதிர்ச்சியில் இளைஞர்!
எர்ணாகுளம்: கேரளாவில் ஆன்லைன் நிறுவனத்தில் வாட்ச் ஆர்டர் செய்தபோது காண்டம் வந்ததால் அதனை ஆர்டர் செய்த நபர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய நவீன உலகில் எல்லாமே நமது விரல் நுனியில் உள்ளது. முன்பெல்லாம் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரமலான் போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் மக்கள் குடும்பத்துடன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவார்கள்.
இதற்காக தனியாக ஒரு நாளையே ஒதுக்குவார்கள். அந்த காலமெல்லாம் மலையேறி போய் விட்டது. இப்போது நாம் விரும்பிய பொருளை இருக்கும் இடத்திலேயே பெற்றுக் கொள்ளும் வசதி வந்து விட்டது.

ஆன்லைன் நிறுவனங்கள்
எங்கு இருந்து என்ன பொருள் ஆர்டர் செய்தாலும், அந்த பொருள் நம்மை தேடி வந்து விடுகின்றன. இதற்காக எக்கச்சக்க ஆன்லைன் நிறுவனங்கள் கொட்டி கிடக்கின்றன. ஆனால் இப்படி பொருட்களை ஆர்டர் செய்யும்போது ஏகப்பட்ட தவறுகள் நிகழ்ந்து வருகின்றன. சில சமயம் பார்சலில் பொருட்களே இருக்காது. சில நேரம் நாம் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக வேறு பொருள் வரும்.

வாட்ச் ஆர்டர் செய்தார்
இந்த நிலையில் கேரளாவில் ஆன்லைனில் வாட்ச் ஆர்டர் செய்த நபருக்கு காண்டம் பார்சலில் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் தட்டாங்குளத்தை சேர்ந்தவர் அனில்குமார்(32). இவர் ஆன்லைனில் வாட்ச் ஒன்றை ஆர்டர் செய்தார். அந்த வாட்ச்சின் விலையான ரூ.2,400-ஐ முன்கூட்டியே செலுத்தினார். 15-ம் தேதி அவரது கைக்கு வாட்ச் வந்து சேரும் என ஆன்லைன் நிறுவனம் கூறி இருந்தது.

அதுவும் இந்த கொடுமை
நேற்று முன்தினம் அந்த ஆன்லைன் நிறுவனத்தில் இருந்து ஒரு பார்சல் வந்தது. நமது புதிய வாட்ச் எப்படி இருக்கிறது? என்பதை அறிவதற்காக அனில்குமார் அந்த பார்சலை ஆர்வமுடன் பிரித்தார். அப்போது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் பார்சலில் இருந்த சிறிய அட்டை பெட்டியில் 2 ஆணுறைகள்(காண்டம்) இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

எப்படி வந்தது?
தண்ணீர் நிரப்பப்பட்ட நிலையில் ஒரு காண்டமும், மற்றொரு சாதாராண காண்டமும் இருந்து கண்டு அதிர்ச்சியில் உறைந்தே போனார். ''நான் வாட்ச்தானே ஆர்டர் செய்தேன். எப்படி இது வந்தது?'' என்று அவர் பார்சலை கொண்டு வந்த நபரிடம் கேட்டார். அதற்கு அந்த நபர் '' இதில் எப்படி காண்டம் வந்தது என்று எனக்கு தெரியாது. பார்சலை கொண்டு சேர்ப்பது மட்டும்தான் எனது வேலை'' என்று கூறினார்.

அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்
இதனை தொடர்ந்து அனில்குமார் தான் வாட்ச் ஆர்டர் செய்த ஆன்லைன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் உரிய பதிலை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர் இதுபற்றி ஆலுவா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications