பெங்களூர் டூ ஈரோடு.. ஆசை ஆசையாய் 2.5 லட்சத்திற்கு குழந்தையை வாங்கிய பெண்கள்.. இறுதியில் ட்விஸ்ட்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி பழனிபுரத்தில் 2 பெண்கள் சேர்ந்து 9 மாத பெண் குழந்தையை விலைக்கு வாங்கி வந்து வளர்ப்பதாக மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிக்கு ரகசிய தகவல் வந்தது. போலீசார் சென்று விசாரித்த போது, பெங்களூரில் இருந்து ரூ.2.5 லட்சத்துக்கு 9 மாத குழந்தையை விலைக்கு வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து 2 பெண்களை பவானி போலீசார் கைது செய்தனர். அவர்கள் குழந்தையை கடத்தி விற்க முயன்றார்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
குழந்தைகளை கடத்தி விற்பது இன்றைக்கு ஆங்காங்கே நடக்கிறது. அப்படி ஒரு சம்பவம் ஈரோடு மாவட்டம் பவானியில் நடந்துள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி பழனிபுரம் 4-வது வீதியில் 2 பெண்கள் சேர்ந்து 9 மாத பெண் குழந்தையை விலைக்கு வாங்கி வந்து வளர்ப்பதாக மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிக்கு ரகசிய தகவல் வந்தது. அவர் அளித்த தகவலின் பேரில் பவானி டிஎஸ்பி ரத்தினகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையா ஆகியோர் நேரில் சென்று விசாரித்த போது, பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளது.

போலீசார் வெளியிட்ட தகவலின்படி, ஈரோடு மாவட்டம்பவானி பழனிபுரத்தை சேர்ந்த சகாயராஜ் என்பவருடைய மனைவி செல்வி (வயது 37). பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஆனந்தராஜ் என்பவருடைய மனைவி ஜானகி (47). செல்வியும், ஜானகியும் அந்த பகுதியில் உள்ள துணிப்பை தைக்கும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்கள். செல்விக்கு ஒரு மகன் உள்ளார். மகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார்.
இந்தநிலையில் செல்வியை அவருடைய கணவர் விவாகரத்து செய்து விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் செல்வி தனியாக வசித்து வந்துள்ளார். ஜானகிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கணவர் ஆனந்தராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். மகனும், மகளும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். இதனால் ஜானகியும் தனியாக தங்கியுள்ளார். தனியாக வசித்து வந்ததால் செல்வியும், ஜானகியும் சேர்ந்து ஒரு குழந்தையை விலைக்கு வாங்கி வளர்க்க முடிவு செய்திருக்கிறார்களாம். இதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ஒரு பெற்றோரிடம் குழந்தையை விலைக்கு கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் சம்மதித்ததாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு செல்வியும், ஜானகியும் காரில் பெங்களூர் சென்றுள்ளனர். பின்னர் 9 மாத பெண் குழந்தையை ரூ.2.5 லட்சத்துக்கு விலை கொடுத்து வாங்கி வந்துள்ளனர். ஆனால் பெங்களூருவில் எந்த பகுதிக்கு டிரைவர் அழைத்து சென்றார்?, அவர் யார்?, அவருடைய செல்போன் எண் என்ன என்பது? குறித்து அவர்கள் தெரிவிக்கவில்லை.
இதையடுத்து குழந்தையை விலைக்கு வாங்கியதாக செல்வியையும், ஜானகியையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து குழந்தையை மீட்டு ஈரோடு சோலாரில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர். எனினும் செல்வியும், ஜானகியும் குழந்தையை கடத்தி வந்து விற்க முயன்றார்களா அல்லது உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த சம்பவம் ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications