முதுமலையில் 28 யானைகளுக்கும்.. கொரோனா நெகட்டிவ்... நிம்மதியில் பாகன்கள்
ஈரோடு: முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள 28 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அதில் எந்த யானைக்கும் கொரோனா இல்லை என்பது தெரியவந்துள்ளது.
உலகையே கடந்த 2 ஆண்டுகளாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பது கொரோனா தான். பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு கையை மீறிச் சென்றன.

மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அமெரிக்காவில் கடந்த ஆண்டே பூனை, சிங்கம் உள்ளிட்ட விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இந்நிலையில், வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்டு வந்த 11 சிங்கங்களில் 9 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதில் ஒரு சிங்கம் கொரோனாவால் உயிரிழந்தது.
இதையடுத்து நீலகிரி மாவட்டம் முதுமையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் இருக்கும் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவிட்டார்.
அதன்படி வன கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையில் மருத்துவர்கள் யானைகளின் தும்பிக்கை மற்றும் ஆசனவாய் பகுதியிலிருந்து மாதிரிகளைச் சேகரித்து, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் யானைகளின் கொரோனா பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் முதுமலை முகாமில் உள்ள எந்த யானைக்கும் கொரோனா இல்லை என்பது தெரியவந்துள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications