ஈரோடு கிழக்கில் ஈவிகேஸ் இளங்கோவன் அபார வெற்றி.. 34 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவை செல்கிறார்!
முதல் சுற்றில் இருந்தே தொடர்ந்து முன்னிலை வகித்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகளும் வெற்றி பெற்றுள்ளனர். 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை காங்கிர்ஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் வழங்கினார் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார்.

அபார வெற்றி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 10,827 வாக்குகளும், தேமுதிகவின் ஆனந்த் 1,432 வாக்குகளும் பெற்றனர்.
தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட 75 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்தனர்.

வாக்கு எண்ணிக்கை
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து, அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கடந்த 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு 74.79 சதவீதம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

ஆரம்பத்தில் இருந்தே முன்னிலை
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் பதிவான 398 தபால் வாக்குகளில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 250 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 104 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 10 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் ஒரு வாக்கும் பெற்றனர். அதேபோல, சமாஜ்வாதி வேட்பாளர் மற்றும் சுயேச்சைகள் 7 வாக்குகளைப் பெற்றனர். நோட்டாவுக்கு ஒரு வாக்கு கிடைத்தது. 25 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன.

வாக்குகள் - முழு விவரம்
அதைத்தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. 16 மேஜைகள் அமைக்கப்பட்டு 15 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முதல் சுற்றில் தொடங்கி, இறுதிச் சுற்றான 15வது சுற்று வரை ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். 15-வது சுற்றின் நிறைவில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43,923 வாக்குகள் பெற்றார். 66,575 வாக்குகள் வித்தியாத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார்.

சான்றிதழ் பெற்ற இளங்கோவன்
இதையடுத்து, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் வழங்கினார். கடந்த 2021 பொதுத் தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா 67 ஆயிரத்து 300 வாக்குகள் பெற்ற நிலையில், தற்போது 1 லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்று, 66 ஆயிரத்து 233 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

மீண்டும் சட்டப்பேரவைக்கு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தொகுதியில், 1984-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ்இளங்கோவன், தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்முறையாக நுழைந்தார். பின்னர், 2004ல் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் எம்.பியாக வென்றார். மத்திய அமைச்சர், காங்கிரஸ் மாநிலத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த ஈவிகேஎஸ்.இளங்கோவன், 34 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவைக்குச் செல்கிறார்.

கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து, அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அதேபோல, கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சிக்கல்.. ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் சம்மன் -
லால்குடியில் களமிறங்கும் ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவை பரிசு மழையில் நனைய வைத்த லீமா ரோஸ்! -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்.. ஐகோர்ட்டில் பரபர மனு! -
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்? -
2021ல் திமுக vs அதிமுக.. எந்த மண்டலத்தில் எந்தெந்த கட்சி ஆதிக்கம் செய்தது? தமிழ்நாடு MAPஐ பாருங்க! -
ட்விஸ்ட் தரும் கேரளா.. காங்கிரஸ், இடதுசாரிக்கு நோ பெரும்பான்மை. சத்தமின்றி பாஜக சம்பவம்! புதிய சர்வே -
2021ல் திமுக vs அதிமுக.. வாக்கு வித்தியாசம் வெறும் 5.7% தான்.. கேம்சேஞ்சரான நாதக, அமமுக, கமல்ஹாசன்! -
டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு! -
இதுவரை 4 முறை டெல்லிக்கு பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி! அதிமுக பாணியையே மாற்றிய பாஜக! -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி












Click it and Unblock the Notifications