ஈரோடு அருகே விஏஓ டூ தாசில்தார்.. பட்டாவில் பெயர் சேர்க்க வேண்டியவர்கள்.. சிறைக்கு போனது எப்படி?
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மொடச்சூர் கே.ஏ.எஸ். காலனியை சேர்ந்த ஆசைத்தம்பி என்பவர் விவசாயி ஆவார். இவருடைய மனைவி ஜெயா. இவர் பட்டாவில் பெயர் சேர்ப்பதற்காக கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார் என்பவரை அணுகி உள்ளார். ஆனால் அவர் பட்டாவில் பெயர் சேர்க்க 20 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இந்த விவகாரத்தில் துணை தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை பொறி வைத்து பிடித்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பட்டா பெயர் மாற்றம் செய்ய, பட்டாவில் திருத்தம் செய்ய, நிலத்தை அளக்க, வீட்டு வரி ரசிது போட, புதிய மின் இணைப்பு பெறுவதற்கு, பத்திரப்பதிவு செய்ய என வீடு, நிலம் தொடர்பான விவகாரங்களில் ஒரு சில அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது. அவர்கள் மீது பொதுமக்களின் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைதும் செய்கிறார்கள். அப்படியான ஒரு சம்பவம் ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்துள்ளது.

பட்டாவில் பெயர்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மொடச்சூர் கே.ஏ.எஸ். காலனியில் வசிப்பவர் ஆசைத்தம்பி. அவருடைய மனைவி பெயர் ஜெயா. ஆசை தம்பி ஜெயா தம்பதி விவசாயிகள் ஆவார். இந்நிலையில் ஜெயா, தனது பட்டாவில் பெயர் சேர்ப்பதற்காக கலிங்கியம் கிராம நிர்வாக அலுவலரான 33 வயதாகும் சசிகுமார் என்பவரை அணுகினாராம். அதற்கு அவர் பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
லஞ்சம்
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெயா ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் சென்றார். அங்கு மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ரவிச்சந்திரனிடம் நடந்த விவகாரங்களை கூறி புகார் அளித்தார். லஞ்சம் கேட்டதற்கான ஆதாரங்களை கொடுத்தார். இதையடுத்து, அவர் லஞ்சம் கேட்ட சசிகுமாரை பொறி வைத்து பிடிக்க ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜெயாவிடம் கொடுத்து அனுப்பினார்.
கைதான துணை தாசில்தார்
அதன்படி ஜெயா கோபி அருகே உள்ள கலிங்கியத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்துக்கு நேற்று சென்று ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரத்தை சசிகுமாரிடம் கொடுத்தார். அப்போது கிராம நிர்வாக அலுவலகத்தின் வெளியே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீரென உள்ளே நுழைந்து சசிகுமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அப்போது சசிகுமார் கோபி மண்டல துணை தாசில்தார் மணிமேகலை (43) கூறித்தான் ஜெயாவிடம் லஞ்சம் வாங்கியதாக தெரிவித்தார். இதையடுத்து மணிமேகலையையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் ஈரோடு மாவட்டம் கோபி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications