ஈரோடு அருகே விஏஓ டூ தாசில்தார்.. பட்டாவில் பெயர் சேர்க்க வேண்டியவர்கள்.. சிறைக்கு போனது எப்படி?
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மொடச்சூர் கே.ஏ.எஸ். காலனியை சேர்ந்த ஆசைத்தம்பி என்பவர் விவசாயி ஆவார். இவருடைய மனைவி ஜெயா. இவர் பட்டாவில் பெயர் சேர்ப்பதற்காக கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார் என்பவரை அணுகி உள்ளார். ஆனால் அவர் பட்டாவில் பெயர் சேர்க்க 20 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இந்த விவகாரத்தில் துணை தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை பொறி வைத்து பிடித்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பட்டா பெயர் மாற்றம் செய்ய, பட்டாவில் திருத்தம் செய்ய, நிலத்தை அளக்க, வீட்டு வரி ரசிது போட, புதிய மின் இணைப்பு பெறுவதற்கு, பத்திரப்பதிவு செய்ய என வீடு, நிலம் தொடர்பான விவகாரங்களில் ஒரு சில அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது. அவர்கள் மீது பொதுமக்களின் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைதும் செய்கிறார்கள். அப்படியான ஒரு சம்பவம் ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்துள்ளது.

பட்டாவில் பெயர்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள மொடச்சூர் கே.ஏ.எஸ். காலனியில் வசிப்பவர் ஆசைத்தம்பி. அவருடைய மனைவி பெயர் ஜெயா. ஆசை தம்பி ஜெயா தம்பதி விவசாயிகள் ஆவார். இந்நிலையில் ஜெயா, தனது பட்டாவில் பெயர் சேர்ப்பதற்காக கலிங்கியம் கிராம நிர்வாக அலுவலரான 33 வயதாகும் சசிகுமார் என்பவரை அணுகினாராம். அதற்கு அவர் பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
லஞ்சம்
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெயா ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் சென்றார். அங்கு மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ரவிச்சந்திரனிடம் நடந்த விவகாரங்களை கூறி புகார் அளித்தார். லஞ்சம் கேட்டதற்கான ஆதாரங்களை கொடுத்தார். இதையடுத்து, அவர் லஞ்சம் கேட்ட சசிகுமாரை பொறி வைத்து பிடிக்க ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஜெயாவிடம் கொடுத்து அனுப்பினார்.
கைதான துணை தாசில்தார்
அதன்படி ஜெயா கோபி அருகே உள்ள கலிங்கியத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்துக்கு நேற்று சென்று ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரத்தை சசிகுமாரிடம் கொடுத்தார். அப்போது கிராம நிர்வாக அலுவலகத்தின் வெளியே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீரென உள்ளே நுழைந்து சசிகுமாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அப்போது சசிகுமார் கோபி மண்டல துணை தாசில்தார் மணிமேகலை (43) கூறித்தான் ஜெயாவிடம் லஞ்சம் வாங்கியதாக தெரிவித்தார். இதையடுத்து மணிமேகலையையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் ஈரோடு மாவட்டம் கோபி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு -
"முதல்ல பணத்தை எடுத்து வை.." ஹார்முஸை கடக்க சுங்க கட்டணம்.. மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய ஈரான் -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
சவால் விட்ட செங்கோட்டையன் அதிர்ச்சி.. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாததால் கடும் அப்செட்! -
சரியான நேரத்தில் எச்சரித்த ஆனந்த் சீனிவாசன்... சட்டென எகிறிய தங்கம் விலை.. இனி என்ன நடக்கும்? -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
உன்னை கட்சியில் வைத்திருந்தால்.. அதிமுகவையே விற்றுருப்பாய்.. ஓபிஎஸ்ஸை தரக்குறைவாக பேசிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications