நீ சரியான ஆம்பளையா இருந்தா.. வார்த்தையை விட்ட எடப்பாடி.. இப்படிலாம் பேசலாமா? இயக்குனர் நவீன் விளாசல்!
நீ சரியான ஆம்பளையா இருந்தா.. மீசை வச்ச ஆம்பளையா இருந்தா.. என்று எடப்பாடி பேசியது சர்ச்சையாகி உள்ளது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்து வரும் எடப்பாடி பழனிசாமி தனது டோனை அப்படியே மாற்றி இருக்கிறார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வரும் 27ம் தேதி இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் அதிகாரபூர்வ அதிமுக வேட்பாளர் ஆகிவிட்டார். இவருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டுவிட்டது. இவருக்காக எடப்பாடி பழனிசாமி தற்போது தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று இங்கே பிரச்சாரம் செய்த இவர் இன்று இரண்டாவது நாளாக மீண்டும் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

பிரச்சாரம்
நேற்று பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 21 மாதமாக மக்களை அமைச்சர்கள் சந்திக்கவே இல்லை. ஆனால் இப்போது தேர்தல் என்றதும் மக்களை சந்திக்கிறார்கள். நான் இப்போது மக்களை சந்திப்பது போல முதல்வருக்கு மக்களை சந்திக்க நேரம் இருக்கிறதா? அவர் ஏன் வெளியே வருவதே இல்லை. தேர்தலுக்கு முன் வந்தாரே? வெற்றிபெற்ற பின் ஏன் அவர் மக்களை சந்திப்பதே இல்லை. 21 மாதமாக வெளியே வராத அமைச்சர்கள் இப்போது டீ போடுவது, வடை சுடுவது என்று மக்களை ஏமாற்றுகிறார்கள்.

ஆம்பளையா இருந்தா
நீ சரியான ஆம்பளையா இருந்தா.. மீசை வச்ச ஆம்பளையா இருந்தா.. வேட்டி கட்டின ஆம்பளையா இருந்தா.. நேரா வெளியே வந்து மக்களை சந்தி. உங்களுக்கு திராணி இல்லை. தெம்பு இல்லை. அதிமுகவை சந்திக்கும் திறமை இல்லை. சூடு, சொரணை, வெட்கம், மானம் இருந்தால் வெளியே வந்து வாக்காளரை சந்தி. அதிமுகவை எதிர்க்கும் சக்தி உனக்கு கிடையாது.

கூட்டணி
உங்கள் கூட்டணி கட்சி வேட்பாளருக்காக நீ அமைச்சர்களை எல்லாம் களமிறக்கி இருக்கிறீர்கள். அமைச்சர்களை எல்லாம் சாலைக்கு கொண்டு வந்துள்ளீர்கள். ஏழைக்கு நீ காசு கொடுத்து கூட்டி வந்து ஈரோட்டில் தங்க வைத்து இருக்கிறாய். அவர்களை வைத்து வாக்கு போட சொல்கிறாய். அதிமுகவை எதிர்க்கும் திறன் உங்களுக்கு இல்லை.

ஈரோடு கிழக்கு தொகுதி
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு திமுக செய்தது என்ன? அவர்கள் செய்த நலத்திட்டங்கள் என்ன ? சொல்லுங்கள் பார்க்கலாம்? ஒரு அமைச்சராவது இங்கே அவர்கள் கொண்டு வந்த திட்டத்தை சொல்ல முடியுமா? மக்கள் அதிமுக பக்கம் இருக்கிறார்கள். மக்களுக்கு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை சொல்லிவிட்டு திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த திமுக என்ன செய்தது வீட்டு வரியை, கடை வரியை உயர்த்தியது. மின்சார கட்டணத்தை உயர்த்தியது. தாங்கள் தேர்தலில் பெற்ற வெற்றிக்கு திமுக கொடுத்த பரிசு இதுதான் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இயக்குனர் நவீன்
அவரின் இந்த பேச்சு விமர்சனங்களை சந்தித்துள்ள நிலையில் இது தொடர்பாக இயக்குனர் நவீன் போஸ்ட் செய்துள்ளார். அவர் தனது போஸ்டில் ஆம்பளயா இருக்கறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு. உங்கள் தலைவர் இரும்புப்பெண் ஜெயலலிதா அம்மையார் ஆம்பளயா? நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா? இன்னும் எத்தனை காலம் இந்த stereotype வசனம் பேசுவீங்க? இது பெண்களை இழிவு படுத்தும் செயல், என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications