"நீட் தேர்வு" நாங்கள் நாடகம் ஆடவில்லை..எடப்பாடி செய்தது என்ன? லிஸ்ட்போட்டு விமர்சித்த கேஎஸ் அழகிரி
ஈரோடு: நீட் தேர்வு விவகாரத்தில் எடப்பாடி மாதிரி நாங்கள் நாடகம் ஆடவில்லை. கடுமையாக எதிர்த்து இருக்கிறோம். மத்திய அரசுக்கு நாங்கள் எங்களுடைய அழுத்தங்களை கொடுத்து இருக்கிறோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ் அழகிரி கூறியுள்ளார்.
ஈரோட்டில் அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ் அழகிரி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகே எஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோட்டில் கடந்த முறை இரட்டை இலை சின்னம் தான் தோல்வி அடைந்தது. போன முறை அவர்கள் வேறு சின்னத்தில் நிற்கவில்லை.

எடப்பாடி மாதிரி நாடகம் ஆடவில்லை
அதே இரட்டை இலை சின்னத்தில்தான் நின்றார்கள். நீட் தேர்வு விவகாரத்தில் எடப்பாடி மாதிரி நாங்கள் நாடகம் ஆடவில்லை. கடுமையாக எதிர்த்து இருக்கிறோம். மத்திய அரசுக்கு நாங்கள் எங்களுடைய அழுத்தங்களை கொடுத்து இருக்கிறோம். எடப்பாடி என்ன செய்தார். சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். உள்துறைக்கு அனுப்பினார். இரண்டே நாளில் உள்துறை திருப்பி அனுப்பிவிட்டது. ஆனால் இரண்டு ஆண்டு காலம் சட்டமன்றத்திற்கு கூட அந்த உண்மையை அவர் சொல்லவில்லை. மறைத்து விட்டார்.

நாங்கள் அப்படி இல்லை
சட்டமன்றத்திற்கு மறைக்கும் குற்றத்தை எடப்பாடி செய்தார். ஆனால் நாங்கள் அப்படி இல்லை. தீர்மானம் நிறைவேற்றினோம். குடியரசு தலைவரை சந்தித்து இருக்கிறோம். பிரதமரை அமரவைத்து பொதுக்கூட்டத்தில் முதல்வர், இதெல்லாம் எங்கள் கோரிக்கை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு கூட பாஜக கோபித்துக்கொண்டது. உரிமைக்காக குரல் கொடுத்து இருக்கிறோம். எங்கள் குரல் எடுபடும். மக்கள் மன்றத்திலும் எடுபடும். நிச்சயமாக மோடி அதற்கு தலைவணங்குவார்.

ஒரே நாளில் யாராலும் செய்ய முடியாது
விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடே போராடியது. அப்போது அதை திரும்ப பெற மாட்டேன் என்று சொன்னவர் சத்தம் போடாமல் ஒருநாள் திரும்ப பெற்றார். அதேபோலத்தான் இதுவும் நடைபெறும். அரசு ஊழியர்களின் கோரிக்கையை அரசாங்கம் பரிவோடு பார்க்கிறது. எல்லாவற்றையும் ஒரே நாளில் யாராலும் செய்ய முடியாது. ஐந்து ஆண்டுகளில் செய்ய வேண்டியதை ஒரே நாளில் யாராலும் செய்ய முடியாது. பொருளாதார நிலை மேம்பட மேம்பட ஒவ்வொன்றாக மெல்ல மெல்ல நடைபெறும்.

சிறு கல்லை கூட தூக்கி போடவில்லை
ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநர் பிரதமர் என்ன செய்கிறார்கள். இந்த சமூகம் எவ்வளவு சீரழிகிறது. அதற்காக ஒரு மாநில அரசு போராடுகிற போது அதை கையெழுத்திட்டு சட்டமாக்கினால் என்ன? மத்திய நிதி அமைச்சகம் செயல் இழந்த ஒரு நிதி அமைச்சகம். அவர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு சிறு கல்லை கூட தூக்கி போடவில்லை. இந்தியாவுடைய தேசிய வருமானம் குறைந்துள்ளது. அவர்கள் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தங்கள் எல்லாம் தோல்வி அடைந்து இருக்கின்றன.

பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது
தங்களுடைய நண்பர்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று இந்த அரசாங்கம் கருதுவதுதான் இதற்கு காரணம். சில முதலாளிகளுக்கு 10 லட்சம் கோடி வங்கிக் கடனை தள்ளுபடி செய்து இருக்கிறார்கள். இதற்கு பிரதமரும் பதில் சொல்லவில்லை. நிதி அமைச்சரும் பதில் சொல்லவில்லை. இதில் என்ன தர்மம் இருக்கிறது. எனவே அவர்களால் இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications