ஈரோடு கிழக்கு.. பணப்பட்டுவாடா புகாரில் எடுத்த நடவடிக்கை என்ன! டிஜிபியிடம் தேர்தல் ஆணையம் கேள்வி
ஈரோடு கிழக்கில் பணப்பட்டுவாடா தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப். 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு திமுக மீதான பணப்பட்டுவாடா புகார் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸின் திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
அங்குக் கடந்த ஜன.31ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் பிப். 27ஆம் தேதி தேர்தல் ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

காங்கிரஸ் வேட்பாளர்
கடந்த முறை இங்கு திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில், இந்த முறையும் காங்கிரஸே அங்குக் களமிறங்குகிறது. அக்கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளர் அறிவிப்பிற்கு முன்பே திமுக அங்குப் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டன. ஆளும் கட்சி என்பதால் இடைத்தேர்தலில் வென்றே தீர வேண்டும் என்ற முனைப்புடன் திமுக எதிர்கொள்கிறது.

புகார்
திமுக சார்பில் தனியாகத் தேர்தலுக்குக் குழு அமைக்கப்பட்டு பிரசாரம் செய்து வருகின்றனர். அதேபோல காங்கிரஸ் கட்சியினரும் தங்கள் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து ஏற்கனவே பிரசாரத்தைத் தொடங்கிவிட்டனர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவின் கேபி ராமலிங்கம், நாராயணன் திருப்பதி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

வீடியோ
அதில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ய முயல்வதாகப் புகார் அளித்தனர். இது தொடர்பாக பென்டிரைவ் ஆவணத்தையும் அவர்கள் ஒப்படைத்தனர். முன்னதாக இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் வீடியோ ஒன்றையும் தனது ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். திமுக என்பது பணத்தை மட்டுமே நம்பி தேர்தலைச் சந்திக்கும் ஒரு கட்சி.. பணத்தை வைத்து எதையும் வாங்கி விடலாம் என்று நம்பும் ஒரு கட்சி என்று விமர்சித்திருந்தார்.

விளக்கம் கேட்பு
இந்த விவகாரத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள இரண்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக பணப்பட்டுவாடா செய்ய முயல்வதாக பாஜக அளித்த புகாரில் எடுத்த நடவடிக்கை என்ன என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் கேட்டுள்ளார்.

டிஜிபி & மாவட்ட தேர்தல் அதிகாரி
இந்த விவகாரத்தில் டிஜிபி சைலேந்திர பாபு, ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான கிருஷ்ணன் உன்னி விளக்கமளிக்க சத்யபிரதா சாகு ஆணையிட்டுள்ளார். தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவின் இந்த நடவடிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.. இன்னும் ஓரிரு தினங்களில் இந்த விவகாரத்தில் விளக்கம் தரப்படும் எனத் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications