Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரோட்டில் 20 பணிமனைகளுக்கு சீல்! போலீஸ் பாதுகாப்புடன் அதிரடி காட்டும் தேர்தல் ஆணையம்! என்ன காரணம்

ஈரோடு கிழக்கில் தேர்தல் அதிகாரிகள் பல்வேறு கட்சிகளின் பணிமனைகளுக்குச் சீல் வைத்தனர்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அங்குப் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ள அதிகாரிகள், இன்று மட்டும் சுமார் 20 தேர்தல் பணிமனைகளுக்குச் சீல் வைத்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே அரசியல் களம் சூடுபிடித்துவிட்டது. அங்கு எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வேட்புமனு தாக்கல் முடிந்துவிட்ட நிலையில், இப்போது களத்தில் 77 வேட்பாளர்கள் உள்ளனர். தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு

கடந்த தேர்தலில் ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியே களமிறங்கியது. இதனால், இந்த முறையும் காங்கிரஸ் கட்சிக்கே ஈரோடு கிழக்கு ஒதுக்கப்பட்டது. இடைத்தேர்தலில் வென்ற தீர வேண்டும் என்பதால் மூத்த அமைச்சர்கள் வேட்பாளர் அறிவிப்பிற்கு முன்னரே பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். அங்குக் காங்கிரஸ் சார்பில் மறைந்த திருமகன் ஈவேராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரும் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளார்

கடும் போட்டி

கடும் போட்டி

அதேபோல அதிமுக சார்பில் இதில் தென்னரசு களமிறங்குகிறார். முதலில் ஓபிஎஸ் தரப்பிலும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதால் அங்குக் குழப்பம் ஏற்பட்டது. இருவர் இரட்டை இலை கோரி விண்ணப்பிக்கும் சூழல் உருவானதால், சின்னமே முடங்கும் என்று கூறப்பட்டது. இருப்பினும், கடைசி நேரத்தில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ் பெற்றார். இதில் அமமுகவும் போட்டியிடாத நிலையில், இரட்டை இலை வாக்குகள் அனைத்தும் அதிமுகவுக்குச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது.

புகார்கள்

புகார்கள்

மேலும், இதில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்ற இளம் பெண் போட்டியிடுகிறார்.. இவர்களைத் தவிர தேமுதிக வேட்பாளரும் களத்தில் உள்ளார். மேலும், பல சிறு கட்சிகளும் சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதன் மூலம் மொத்தம் ஈரோடு கிழக்கில் களத்தில் இருக்கும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 77ஆக உள்ளது.. இதற்கிடையே அரசியல் கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயல்படுவதாகத் தேர்தல் ஆணையத்திற்குப் புகார்கள் அளிக்கப்பட்டன.

20 பணிமனைகளுக்குச் சீல்

20 பணிமனைகளுக்குச் சீல்

இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் அதிகாரிகள் இப்போது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். வீரப்பன்சத்திரம் பகுதியில் இன்று ஆய்வு செய்த அதிகாரிகள், அனுமதியில்லாமல் செயல்பட்டு வரும் தேர்தல் பணிமனைகளுக்குச் சீல் வைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இப்படி அனுமதியில்லாமல் செயல்பட்ட சுமார் 20 தேர்தல் பணிமனைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடவடிக்கை தொடரும்

நடவடிக்கை தொடரும்

முன்னதாக நேற்றைய தினமும் இதேபோல ஆய்வு செய்த அதிகாரிகள் சுமார் 10க்கும் மேற்பட்ட தேர்தல் பணிமனைகளுக்குச் சீல் வைத்தனர். குறிப்பாக திமுக பணிமனைகள் 10 மற்றும் அதிமுக பணிமனைகள் 4 சீல் வைக்கப்பட்டது. சில இடங்களில் அரசியல் கட்சியினர் வாக்குவாதம் செய்த நிலையில், அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் உதவியுடன் சீல் வைக்கப்பட்டது. வரும் நாட்களிலும் அனுமதியில்லாமல் செயல்படும் தேர்தல் பணிமனைகள் சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், அங்கு ஏற்கனவே பாதுகாப்பிற்குத் துணை ராணுவப்படையும் குவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப். 27ஆம் தேதி நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களுடன் ஈரோடு கிழக்கிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து அடுத்த மாதம் மார்ச் 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஈரோடு கிழக்கில் மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+