ரூ.1 -க்கு மூன்று வேளையும் உணவு! முதலமைச்சர் ஸ்டாலின் இதயத்தை நனைத்த ஈரோடு தம்பதியின் ஈரமனது!
ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனையில் நோயாளிகளை உடனிருந்து கவனித்துக் கொள்ள வருபவர்களுக்கு 3 வேளையும் ரூ.1-க்கு உணவு வழங்கி வரும் தம்பதி குறித்த தகவல் முதலமைச்சரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஈரோடு வெங்கட்ராமன் - ராஜலட்சுமி இணையரின் ஈரமனது எனது இதயத்தையும் நனைத்துவிட்டது என அந்த தம்பதியை பாராட்டி பெருமைப் படுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

ஈரோடு அரசு மருத்துவமனை
ஈரோடு அரசு மருத்துவமனை எதிரே கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வெங்கட்ராமன் - ராஜலட்சுமி இணையர் சைவ உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்கள். மதியச் சாப்பாடு ஒன்று 70 ரூபாய்க்கு விற்று வரும் இவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு அதில் 20% தள்ளுபடி செய்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை உடனிருந்து கவனித்துக் கொள்ள வருபவர்களுக்கு மட்டும் மூன்று வேளையும் ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கி தங்களது தன்னலமற்ற சேவையை தொடர்கின்றனர்.

40 பேர் முதல் 50
நாளொன்றுக்கு 40 சாப்பாடு முதல் 50 சாப்பாடு வரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அட்டெண்டராக வந்திருப்பவர்களுக்கு வெறும் ஒரு ரூபாயில் வழங்கி வருகிறார்கள் வெங்கட்ராமன் -ராஜலட்சுமி இணையர். இதேபோல் காலை, இரவு நேரங்களிலும் ஒரு ரூபாய்க்கு சிற்றூண்டி வழங்கி ஏழை எளிய மக்களின் பசியாற்றுகிறார்கள். ஈரோடு சுற்றுவட்டாரத்தில் இருந்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் கிராமப்புற ஏழை எளியோர் மனதார அந்த தம்பதியை வாழ்த்திச் செல்கின்றனர்.

முதல்வரின் கவனத்திற்கு
ஈரோடு தம்பதியின் இந்த தொண்டு குறித்த தகவல் முதலமைச்சர் ஸ்டாலினின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. விரைவில் அவர்களை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து முதல்வர் நேரில் பாராட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவின் விவரம் வருமாறு;

முதலமைச்சர் பாராட்டு
"மண்டினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்; உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே" என மணிமேகலை காட்டும் வழியில் மானுடம் போற்றி, எளியோரின் பசியாற்றும் ஈரோடு வெங்கட்ராமன் - ராஜலட்சுமி இணையரின் ஈரமனது எனது இதயத்தையும் நனைத்துவிட்டது. ஈதல்! இசைபட வாழ்தல்! இதுவே தமிழறம்!''. இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு வெளியிட்டுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications