ரூ.1 -க்கு மூன்று வேளையும் உணவு! முதலமைச்சர் ஸ்டாலின் இதயத்தை நனைத்த ஈரோடு தம்பதியின் ஈரமனது!
ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனையில் நோயாளிகளை உடனிருந்து கவனித்துக் கொள்ள வருபவர்களுக்கு 3 வேளையும் ரூ.1-க்கு உணவு வழங்கி வரும் தம்பதி குறித்த தகவல் முதலமைச்சரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஈரோடு வெங்கட்ராமன் - ராஜலட்சுமி இணையரின் ஈரமனது எனது இதயத்தையும் நனைத்துவிட்டது என அந்த தம்பதியை பாராட்டி பெருமைப் படுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

ஈரோடு அரசு மருத்துவமனை
ஈரோடு அரசு மருத்துவமனை எதிரே கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வெங்கட்ராமன் - ராஜலட்சுமி இணையர் சைவ உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்கள். மதியச் சாப்பாடு ஒன்று 70 ரூபாய்க்கு விற்று வரும் இவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு அதில் 20% தள்ளுபடி செய்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளை உடனிருந்து கவனித்துக் கொள்ள வருபவர்களுக்கு மட்டும் மூன்று வேளையும் ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கி தங்களது தன்னலமற்ற சேவையை தொடர்கின்றனர்.

40 பேர் முதல் 50
நாளொன்றுக்கு 40 சாப்பாடு முதல் 50 சாப்பாடு வரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அட்டெண்டராக வந்திருப்பவர்களுக்கு வெறும் ஒரு ரூபாயில் வழங்கி வருகிறார்கள் வெங்கட்ராமன் -ராஜலட்சுமி இணையர். இதேபோல் காலை, இரவு நேரங்களிலும் ஒரு ரூபாய்க்கு சிற்றூண்டி வழங்கி ஏழை எளிய மக்களின் பசியாற்றுகிறார்கள். ஈரோடு சுற்றுவட்டாரத்தில் இருந்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் கிராமப்புற ஏழை எளியோர் மனதார அந்த தம்பதியை வாழ்த்திச் செல்கின்றனர்.

முதல்வரின் கவனத்திற்கு
ஈரோடு தம்பதியின் இந்த தொண்டு குறித்த தகவல் முதலமைச்சர் ஸ்டாலினின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. விரைவில் அவர்களை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து முதல்வர் நேரில் பாராட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவின் விவரம் வருமாறு;

முதலமைச்சர் பாராட்டு
"மண்டினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்; உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே" என மணிமேகலை காட்டும் வழியில் மானுடம் போற்றி, எளியோரின் பசியாற்றும் ஈரோடு வெங்கட்ராமன் - ராஜலட்சுமி இணையரின் ஈரமனது எனது இதயத்தையும் நனைத்துவிட்டது. ஈதல்! இசைபட வாழ்தல்! இதுவே தமிழறம்!''. இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு வெளியிட்டுள்ளார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications