ஈரோடு கிழக்கில் மைக் உடன் நாம் தமிழர் தம்பிகள்! கிடைக்காத விவசாயி.. சற்றுமுன் வெளியான அறிவிப்பு
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக நாம் தமிழர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. திமுகவினர் உதயசூரியன் சின்னத்துடன் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்திலேயே போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து கடந்த 2023ஆண்டு இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் கடந்தாண்டு அவர் மறைவடைந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு 2வது முறையாக இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஒரே ஆட்சி காலத்தில் மூன்று முறை தேர்தல்களை சந்தித்தவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் என்ற புதிய சாதனை படைக்க இருக்கின்றனர்.
பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்து உள்ள நிலையில் திமுக முதல் ஆளாக தனது வேட்பாளரை அறிவித்தது. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். அவரை எதிர்த்து தமிழகத்தின் ஒரே கட்சியாக நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என சீமான் அறிவித்ததோடு, சீதாலட்சுமியை வேட்பாளராக அறிவித்திருக்கிறார்.
சீதாலட்சுமியும் வேட்பு மனு தாக்கல் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். உதயசூரியன் சின்னம் திமுகவுக்கு பல ஆண்டுகளாக இருப்பது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்குவது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்து தேர்தலுக்கு முன்பாக கரும்பு விவசாயி சின்னம் இருந்த நிலையில் மக்களவைத் தேர்தலின் போது மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது.
இதற்கிடையே கடந்த மக்களவைத் தேர்தலில் பத்து சதவீத வாக்குகளை பெற்றதால் மாநில கட்சியாக நாம் தமிழர் அங்கீகாரம் பெற்றது. ஆனால் சின்னம் இன்னும் ஒதுக்கப்படவில்லை. விவசாயி மற்றும் புலி சின்னங்களை நாம் தமிழர் கேட்ட நிலையில் உயிரோடு இருக்கும் விலங்கு என்ற காரணத்தால் புலி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கவில்லை. மேலும் விவசாய சின்னத்தையும் ஒதுக்க மறுத்தது. தேர்தல் ஆணையம். ஏற்கனவே தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் இருக்கும் சின்னங்களில் ஒன்றை தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொண்டது.
ஆனால் தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சின்னங்கள் தங்கள் கட்சியின் கொள்கைகளுக்கு பொருந்தவில்லை எனக் கூறி விவசாயி சின்னத்தையே பெற நாம் தமிழர் கட்சியினர் முயன்று வருகின்றனர். மேலும் தாங்களாகவே ஒரு சின்னத்தை வரைந்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி உள்ளனர். மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரான மம்தா பானர்ஜி தானாகவே ஒரு சின்னத்தை வரைந்து கொடுத்து தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது அதே பாணியை பின்பற்றி விவசாயி சின்னத்தையே சற்று மாற்றி அமைத்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி உள்ளது நாம் தமிழர் கட்சி. இன்று அந்த சின்னத்துக்கு ஒப்புதல் வழங்கப்படும் எனவும், சீமான் அந்த சின்னத்தை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வேட்புமனு வாபஸுக்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்திலேயே போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலிலும் மைக் சின்னத்திலேயே நாம் தமிழர் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications