திராவிட மாடல் சாதனை: பெரிய வெற்றி கிடைக்கும்! ஈரோடு கிழக்கில் வாக்களித்தபின் சந்திரகுமார் பேச்சு
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விறுவிறுப்புடன் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இன்று காலை திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் மனைவி மற்றும் மகளுடன் வந்து தனது வாக்கினை செலுத்தினார். கொசுவண்ண வீதியிலுள்ள BVB குழந்தைகள் பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், திராவிட மாடல் அரசின் திட்டங்களால் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்று கூறினார்.
மேலும், முதல்வர் ஸ்டாலினின் ஆசியோடும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நல்வாழ்த்துக்களுடன், அமைச்சர் முத்துசாமி வழிகாட்டுதலோடு இந்த இடைத்தேர்தலை சந்தித்துள்ளேன். ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள அனைத்து வேட்பாளர்களும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று கூறினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. காலை 7.00 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. வாக்காளர்கள் ஆர்வத்தோடு வாக்களித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் இன்று காலை தனது வாக்கினை செலுத்தினார்.
திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தனது குடும்பத்தினருடன் தனது வாக்கினை கொசுவண்ண வீதியிலுள்ள BVB குழந்தைகள் பள்ளியில் செலுத்தினார். அவருடன் மனைவி அமுதா, மகள் ருசிதா ஸ்ரீ, மகன் மெகர்வின் ஸ்ரீ ஆகியோரும் வாக்கினை செலுத்தினர். இதைத்தொடர்ந்து விசி சந்திரகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசியோடும், தமிழ்நாடு முதலமைச்சர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நல்வாழ்த்துக்களுடன், அமைச்சர் சு.முத்துசாமி வழிகாட்டுதலோடு இந்த இடைத்தேர்தலில் சந்தித்துள்ளேன். இந்த இடைத்தேர்தலை பொறுத்த வரையிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய உதயசூரியன் சின்னம் மிகப்பெரிய வெற்றியை பெறும்.
அந்த மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக இருக்கப் போவது கடந்த நான்கு ஆண்டுகால திராவிட மாடல் அரசின் மக்கள் நல திட்டங்களே இந்த மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக இருக்கும் . தற்போது வாக்குப்பதிவு துவங்கி நடந்து கொண்டிருக்கின்ற நிலையில் நான் எனது வாக்குச்சாவடியில் என்னுடைய வாக்கை பதிவு செய்துவிட்டு வந்திருக்கின்றேன்.
இந்த தேர்தலில் இந்த கிழக்கு தொகுதியில் இருக்கின்ற மக்கள் அனைவரும் உங்களுடைய வாக்குகளை தவறாமல் செலுத்தி ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என உங்களையெல்லாம் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
-
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications