Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரோட்டில்.. அரசு பள்ளியில் "ரகசியமாக" வந்து நின்றது யார் பாருங்க.. பார்த்ததுமே பதறிட்டாங்க.. சூப்பர்ல

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு பள்ளிகளில் இன்று திடீர் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.. என்ன நடந்தது? ஆசிரியர்கள், மாணவர்கள் ஏன் பதறிப்போய்விட்டார்கள்?

தமிழ்நாட்டில் 5 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியருக்கான அரையாண்டு தேர்வுகளை டிசம்பரில் நடத்த மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தியிருக்கிறார்..

Erode Government Schools and Minister Anbil Mahesh sudden review at Erode government schools today

அட்டவணை: அதன்படி 11, 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 7ம் தேதி முதல் 22ம் தேதி வரையும், 6-10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 11ம் தேதி முதல் டிசம்பர் 21ம் தேதி வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வி ஆண்டு முதல் தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு மாநில அளவில் ஒரே வினாத்தாள் அடிப்படையில் நடத்தப்படுகிறது. அதன்படி, அரையாண்டு தேர்வுக் கால அட்டவணையையும், பள்ளிக்கல்வித் துறை நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திடீரென ஈரோடு மாவட்டத்துக்கு வருகை தந்தார்..

Erode Government Schools and Minister Anbil Mahesh sudden review at Erode government schools today

மொடக்குறிச்சி: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரசு பள்ளி, மொடக்குறிச்சியில் உள்ள அரசு பள்ளி, ஈரோடு மாணிக்கம் பாளையத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பவானியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி உள்ளிட்ட பள்ளிகளிலும், அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்..

அந்த பள்ளிகளின் வளாகம், கழிப்பறை, வகுப்பறை, குடிநீர் வசதி முறையாக உள்ளதா? என்று ஒவ்வொரு பகுதியாக சென்று நேரடியாகவே ஆய்வுகளில் மேற்கொண்டார்..

Erode Government Schools and Minister Anbil Mahesh sudden review at Erode government schools today

மாணவர்கள்: அதேபோல, கிச்சனுக்கும் சென்று, மாணவர்களுக்கு சுகாதார முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா? என்றும் ஆய்வு மேற்கொண்டார். பிறகு, பள்ளி மாணவ-மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்... இதற்கு பிறகு, ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார்.. இதற்கு பிறகு, அலுவலர்கள் ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்று பேசினார்.

அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பேசும்போது, "நான் முதல் முறையாக மாவட்ட கல்வி அலுவலக அலுவலர்கள் கூட்டத்தில் இப்போதுதான் பேசுகிறேன். இது எனக்கு பெருமையாக உள்ளது. நமக்கென ஒரு இலக்கு நிர்ணயித்து அதன் வழியில் பயணிக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்து நாம் செயல்பட வேண்டும். சமுதாயத்தில் மாணவர்கள் அடுத்த கட்டம் செல்வதற்கு நீங்கள் அனைவருமே முக்கிய பங்கு வைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

ரகசிய வருகை: இதெல்லாம் அமைச்சர்களின் வழக்கமான ஆய்வுகள் என்றாலும், அன்பில் மகேஷ் ஆய்வுக்கு வரப்போவது ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாம்.. அமைச்சர் வரப்போகிறார் என்று முன்கூட்டியே யாருக்கும் தகவல் தரப்படவில்லையாம்.. அவர் திடீரென ஆய்வுக்கு வந்ததால் பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் பதறிப்போய்விட்டார்களாம்.

அதுமட்டுமல்ல, பள்ளி மாணவர்களிடம், அவர்களது பாடங்களில் இருந்து கேள்விகளை அமைச்சர் கேட்க துவங்கிவிட்டதால், மாணவர்களும் பதட்டமாகிவிட்டார்கள்.. எனினும் அமைச்சரின் கேள்விகளுக்கு, மாணவர்கள் பதிலளித்தனர்.. பிறகு அவர்களிடம் அவர்களிடம் கற்பிக்கப்பட்டவை குறித்தும் அன்பில் மகேஷ் கேட்டறிந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+