அமைச்சரிடம் கோரிக்கை.. மறு நிமிடமே தற்கொலை! திமுக கவுன்சிலர் கணவர் மீது புகார் - லாட்டரி காரணமா?

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: லாட்டரி விற்பனையை எப்படியாவது தடை செய்யுங்கள் என அமைச்சர் முத்துச்சாமிக்கு கோரிக்கை விடுத்த விசைத்தறி உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் எல்லப்பாளையம் அடுத்த முல்லைநகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். விசைத்தறி உரிமையாளரான இவர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்போது நூல் வியாபாரம் செய்து வருகிறார்.

Erode loom owner suicide in after requesting to ban lottery to Minister Muthusamy

இந்த நிலையில் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த ரூ.62 லட்சம் பணம் மொத்தத்தையும் லாட்டரியில் போட்டு பறிகொடுத்து இருக்கிறார் ராதாகிருஷ்ணன். இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார்.

அதில், தனது தற்கொலைக்கு கருங்கல்பாளையம் 39 வது வார்டு கவுன்சிலர் கீதாஞ்சலியின் கணவர் செந்தில்தான் காரணம் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்து இருந்தார். செந்திலிடம் ரூ.30 லட்சத்தை நஷ்டயீடாக பெற்று தனது குடும்பத்தினரிடம் வழங்கவேண்டும் என அவர் கூறினார்.

லாட்டரி சீட்டால் ஈரோடு மாநகரில் பல குடும்பங்கள் சீரழிந்து வருவதாகவும், லாட்டரி இல்லா மாவட்டமாக ஈரோட்டை மாற்ற வேண்டும் என வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். தான் பேசிய வீடியோவை பலருக்கும் அனுப்பி வைத்த ராதாகிருஷ்ணன் பின்னர் தற்கொலை செய்து கொண்டார்.

வீடியோவைப் பார்த்த பலர் உடனடியாக அவரது வீட்டுக்குச் சென்று பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாட்டரி சீட்டில் பல லட்சம் ரூபாயை இழந்து அமைச்சருக்கு கோரிக்கை வைத்தவுடன் தற்கொலை செய்து கொண்டது ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+