சோதனையின்போது திடுக்.. ஈரோடு எம்பி கணேசமூர்த்தியை தாக்கிய மின்காந்த அலை! ட்யூப் லைட் எரிந்த விபரீதம்
Recommended Video
ஈரோடு: உயர் அழுத்த மின் கோபுரம் கீழே நின்ற ஈரோடு எம்பி கணேசமூர்த்தி மின்காந்த அலை தாக்குதலுக்கு உள்ளாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஈரோடு உள்பட மேற்கு மண்டலத்தின் பல மாவட்டங்களில் விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல மாதங்களாகவே போராடி வருகிறார்கள்.
உயர்மின் கோபுரங்கள் உயரமாக இருப்பதால், கீழே சென்றால், மின்சாரம் தாக்காது என்பது மின்சாரத்துறை, சமாதானமாக உள்ளது. ஆனால், மின்சார கம்பியின் கீழ், யாராவது சென்றால் கூட, மின்காந்த புலன் பாயும் என்று, விவசாயிகள் அச்சத்தை தெரிவித்து வருகிறார்கள்.

நேரடி ஆய்வு
இவ்வாறான சூழ்நிலையில், விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில்தான், ஈரோடு தொகுதி எம்.பி. கணேசமூர்த்தி (மதிமுக), ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே உள்ள மூணாம்பள்ளி என்ற கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுரத்தின் கீழ் நின்று நேரடியாக ஆய்வு செய்தார்.

ட்யூப் லைட்டுகள்
உயர்மின் கோபுரத்தின் கீழ் நின்றாலும், மின்சாரம் பாய்கிறதா என்பதை கண்டறிய தன்னுடைய உடலில் டெஸ்டரை வைத்து பார்த்தார். உடனே டெஸ்டரில் இருந்து விளக்கு ஒளிர்ந்தது. உடலில் மின்சாரம் பாய்கிறது என்பதை இது பட்டவர்த்தனமாக காட்டியது. இதேபோல, தனது கைகளில் 2 ட்யூப் லைட்டுகளை அவர் பிடித்துக் கொண்டார். என்ன ஆச்சரியம், வயர் இணைக்கப்படாமலே, ட்யூப் லைட் எரிந்தது.
|
மத்திய அரசிடம் சொல்வேன்
இதுகுறித்து அவர் கூறியதாவது: உயர்மின் கோபுரத்தின் கீழ் நின்றுகொண்டு உடலில் டெஸ்டரை வைத்து பார்த்தால் மின்சாரம் பாய்ந்து விளக்கு எரிகிறது. இதை அறிக்கையாக தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளேன். மேலும் இதுகுறித்த புகைப்படங்களை நாடாளுமன்றத்தில் காட்டி பேச உள்ளேன். மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், மின்சாரத்துறை அமைச்சரிடமும், இந்த பிரச்சினையை கொண்டு செல்லப் போகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மின்காந்த அலைகள்
மின்காந்த அலைகள் உடலில் பாயும்போது, மக்களுக்கு நிறைய நோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும், விளை நிலங்களில் தென்னை உள்ளிட்ட மரங்கள் பட்டுப்போகவும் வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் விவசாயிகள்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications