Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ப்ளீஸ்.. ஒரு மணி நேரம்தான்.." ஸ்டேஷனுக்கு வந்த பெண்ணிடம்.. போலீஸ்காரர் செய்த வேலையை பார்த்தீங்களா?

ஈரோடு தலைமை காவலர் மீது பாலியல் புகார் கிளம்பி உள்ளது

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: புகார் கொடுக்க வந்த பெண்ணிடம், ஆபாசமாக பேசியுள்ளாராம் ஒரு போலீஸ்காரர்.. இதுகுறித்த விவகாரம்தான் ஈரோட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்தவர் நாகரஞ்சினி.. இவர் கோர்ட்டில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கல்யாணமாகிவிட்டது..

ஆனால், மனக்கசப்பு காரணமாக கணவரை விட்டு பிரிந்துவிட்டார்.. தன் குழந்தையுடன் தனியே வசித்து வந்துள்ளார். இவர்களின் விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது..

 நிலுவை

நிலுவை

இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் இவருடைய குழந்தை காணாமல் போய்விட்டது.. அதனால் சித்தோடு ஸ்டேஷனில் புகார் அளிக்க வந்துள்ளார்.. ஸ்டேஷனில் தலைமை காவலராக சிவகுமார் இருந்துள்ளார்.. அவரிடம் குழந்தை காணாமல் போனதை பற்றி தெரிவித்துள்ளார்.. இதையடுத்து குழந்தை குறித்து விசாரணை ஆரம்பமானது.. அப்போது, குழந்தை நாகரஞ்சினியின் கணவர் வீட்டில் இருப்பது தெரிய வந்தது...

 விவாகரத்து

விவாகரத்து

விவாகரத்து கேஸ் கோர்ட்டில் இருக்கும்போது, எப்படி குழந்தையை கடத்தலாம் என்று கேட்டு, மறுபடியும் கணவர் மீது ஒரு கேஸ் தந்தார் நாகரஞ்சினி. இதனால் அடிக்கடி அதே ஸ்டேஷனுக்கு நாகரஞ்சினி சென்று வரும்படி ஆகிவிட்டது.. அதே தலைமை காவலர் சிவகுமாருடன் அடிக்கடி பேசும் சூழலும் உருவானது.. இந்த பழக்கம் நட்பானது.. ஒருகட்டத்தில், நாகரஞ்சினிக்கு ரூ. 3 லட்சம் வரை சிவகுமார் கடனாக கொடுக்கும் அளவுக்கு நட்பு உருவானது..

 போன்

போன்

இந்த பணத்தை ஒருநாள் சிவக்குமார் திரும்ப கேட்டுள்ளார்.. ஆனால், அதை உடனே தருவதில் நாகரஞ்சனிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.. பணத்தை தராமல் இழுபறியும் வந்துள்ளது.. இப்படிப்பட்ட சூழலில்தான், நாகரஞ்சினிக்கு போனை போட்ட சிவகுமார், ''மாட்டு ஆஸ்பத்திரி பின்னாடி ஒரு வீடு இருக்கு. அங்கே ஒரு அம்மா இருக்கிறார்.. நீ அங்கே வந்தால், அந்த அம்மாவை வெளியே அனுப்பிவிட்டு ஒரு மணி நேரம் என்கூட தனிமையில் இருந்துட்டு போ.. அப்படி செய்தால் உனக்கு என்ன உதவி வேணுமோ எல்லாத்தையும் செய்றேன்" என்று சிவக்குமார் பேசியுள்ளார்.

 ஆடியோ

ஆடியோ

இந்த ஆடியோவை அப்படியே பதிந்து கொண்ட நாகரஞ்சனி, சிவக்குமார் மீது இன்னொரு புகார் தந்தார்.. அதை பற்றி போலீசார் விசாரிக்கும்போது, "அது என் குரலே இல்லை.. வேணும்னா குரல் டெஸ்ட் பண்ணிக்குங்க" என்று சிவகுமார் விளக்கம் தந்துள்ளராம்.. இப்போது, இந்த உண்மை தன்மையை ஆராய மாவட்ட டிஎஸ்பி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+