ஈரோடு அருகே கோயில் திருவிழாவில் ஆட்டை வெட்டி ரத்தம் குடித்த பூசாரி உயிரிழப்பு
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே கோயில் திருவிழாவில் ஆட்டை வெட்டி ரத்தம் குடித்த பூசாரி உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள செட்டியாம்பாளையத்தில் கோயில் திருவிழாவில் நடந்த பரண் கிடாய் பூசையில், ஆட்டை வெட்டி அதன் ரத்தம் குடித்த பூசாரி பழனிசாமி (45) மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பாக சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த திருவிழா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது நடந்து வருகிறது. திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும் குட்டிக் குடி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் உள்ள கோவிலில் இருந்து பக்தர்கள் அம்மனை தேரில் வைத்து புத்தூர் மந்தைக்கு ஊர்வலமாக அழைத்து வருவார்கள். அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அம்மனுக்குத் தேங்காய், பழம், மாவிளக்கு வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டிக் குடித்தல் நிகழ்ச்சியை நடத்துவார்கள்.
மந்தையில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த 1500-க்கும் மேற்ப்பட்ட ஆடுகளை கொண்டு வருவார்கள், மருளாளி மந்தைக்கு வருவார். முதலில் இந்து அறநிலையத்துறை சார்பில் அரசு கிடா வழங்கப்படும். பின்னர் முறைப்படி நங்காவரம் பண்ணை ஆடுகள் வழங்கப்பட்டு பொதுமக்கள் ஆடுகள் நேர்த்திக்கடன் கொடுக்கப்பார்கள். மருளாளி வெள்ளி கிண்ணத்தில் ஆட்டின் இரத்தத்தை பிடித்து குடித்து அருள்வாக்கு கூறுவார். , இந்த சடங்கு திருச்சியில் ஏக பிரபலம்.
இதேபோல் திருவாடானை அருகே கீழக்கோட்டை கிராமத்தில் பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் சித்திரை திருவிழா கிடா, சேவல்கள் பலி கொடுக்கப்படும். அதில் கிடா, சேவல் வெட்டப்பட்டு அதிலிருந்து வெளியேறிய ரத்தத்தை ஆக்ரோஷமாக குடிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
இதுதவிர மாசி மாதம் மகாசிவராத்தியை முன்னிட்டு அமாவாசை நாளில் நடைபெறும் மயானக்கொள்ளை விழா பிரசித்தி பெற்றதாகும். காளியம்மன், அங்காளம்மன், பெரியாண்டிச்சி அம்மன் கோயில்களில் இருந்து ஊர்வலமாக மயானங்களுக்கு வரும் பக்தர்கள், அங்கு தங்கள் முன்னோர்கள் சமாதியில் படையல் போட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவார்கள். நள்ளிரவில் நடைபெறும் இந்த மயான கொள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது நம்பிக்கை. இந்த திருவிழா நடைபெறும் பல்வேறு கோயில்களில் ஆட்டு ரத்தம் குடிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம் ஆகும்.
இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில், எல்லா அங்காளம்மன் கோவில்களிலும் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் சிவன் ராத்திரியன்று நடைபெறும் 'குட்டி கடித்தல்' , 'மயான கொள்ளை' என்ற நிகழ்ச்சியில் சிறு ஆட்டின் குரல்வளையை வாயலேயே கடித்து நேர்த்திக் கடன் செய்யும் பழக்கம் இருக்கிறது. அப்படி கடிக்கும்போது ஆட்டின் ரத்தம் பெரும் வேகத்தில் வாயினுள் பாயும். வருடாவருடம் நடைபெறும் சடங்கு இது. மூடநம்பிக்கைக்கு இப்போது ஒரு பலி ஏற்பட்டுள்தாக கூறியுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications