ஈரோட்டில் ஒரே பரபரப்பு.. பள்ளியில் பைபிள் வாசகம் விநியோகம்? சத்தியமங்கலம் பாஜக நிர்வாகி ஹரிஹரன் கைது
ஈரோடு: சத்தியமங்கலத்தில் தனியார் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழாவில் ஏற்பட்ட தகராறில், பாஜக நிர்வாகி கைதாகி உள்ளார்.. இந்த விவகாரம் தொடர்பாக மேலும் 7 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி ஹரிஹரன் தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டியில் செயல்பட்டு வருகிறது அந்த தனியார் சிபிஎஸ்இ பள்ளி.. இங்கு கிறிஸ்துமஸை முன்னிட்டு விழாக்கள் கொண்டாடப்பட்டுள்ளது..

சிறப்பு விருந்தினர்: இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நபர், பைபிள் வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாணவர்களுக்கு வழங்கியிருக்கிறார்.. இந்த விஷயம், ஈரோடு வடக்கு மாவட்ட பாஜ இளைஞரணி செயலாளர் ஹரிஹரனுக்கு தெரியவந்துள்ளது..
இதையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளி குறித்து தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அவதூறாக பதிவிட்டதாக தெரிகிறது. அத்துடன் தன்னுடைய ஆதரவாளர்களை அழைத்துக்கொண்டு, அந்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து, பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களிடம் வாக்குவாதம் செய்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
சத்தியமங்கலம்: இதையடுத்து, அப்பள்ளி நிர்வாகமானது, புஞ்சை புளியம்பட்டி போலீசில் புகார் அளித்தது. இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து பாஜக நிர்வாகி ஹரிஹரனை கைது செய்து, சத்தியமங்கலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிளைச்சிறையில் அடைத்தனர்.
இப்போது இந்த வழக்கில் தொடர்புடைய பாஜ வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சின்னராஜ், பவானிசாகர் மண்டல தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மண்டல தலைவர் தங்கமணி, வர்த்தக அணி மாவட்ட தலைவர் சந்திரசேகர், மண்டல பொதுச்செயலாளர் சதீஷ்குமார், இளைஞர் அணி மண்டல தலைவர் ரகு சூர்யா, ஆறுமுகம் ஆகிய 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை தேடி வருவதாக போலீசார் கூறுகிறார்கள்.
கிறிஸ்தவ பள்ளிகள் மதம் மாற்றும் கேந்திரங்களாக மாறிவிட்டன என்றும், தமிழகத்தில் உடனடியாக மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், பள்ளியில் பைபிள் வாசகம் தரப்பட்டதாக கூறப்படுவது பாஜகவுக்கு மேலும் கொதிப்பை தந்துவருகிறது.
ஈரோடு: அதுமட்டுமல்ல, விரைவில் ஈரோடு இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜக இங்கு போட்டியிடும் என்று சொல்கிறார்கள்.. இன்றுகூட, பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, நிச்சயமாக நாங்களோ அல்லது எங்களது கூட்டணி கட்சியோ தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில், சத்தியமங்கலம் பாஜக பிரமுகர் கைதாகி சிறை சென்றிருப்பது பரபரப்பை தந்து வருகிறது.
-
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications