அழியாத மை–னு சொன்னாங்களே.. அது பொய்யா? ஈரோட்டில் இப்படியா நடக்கணும்! அலட்சிய அதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்களின் கை விரலில் வைக்கப்பட்ட மை உடனடியாக அழிந்துபோனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நம் நாட்டில் உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்களில் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான் வாக்காளர்களின் கை விரலில் அழியாத மை வைக்கப்படும் முறையாகும்.

Anthiyur

வாக்குச்சாவடிக்குள் நுழைந்து ஒருவர் வாக்களிக்க செல்லும்போது அவரது கை விரலில் அழியாத மை வைக்கப்படும். அதன்பிறகு தான் ஒருவரால் ஓட்டு போட முடியும். இன்று நடந்த சட்டசபை தேர்தலிலும் அனைவரின் கை விரல்களிலும் அழியாத மை வைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஒரு பூத்தில் வாக்களித்து செல்லும் வாக்காளர்களின் கை விரலில் அழியா மை வைக்கப்பட்டது. ஆனால் சிலரது விரல்களில் வைக்கப்பட்ட அழியாத மை சில நிமிடங்களிலேய காய்ந்து மறைந்தது. இதுபற்றி 2 பேர் புகார் தெரிவித்தனர்.

அதிகாரிகள் உடனடியாக சுதாரித்து தவறு எங்கே நடந்தது? என்று பார்த்தனர். முதற்கட்ட விசாரணையில் அழியாத மை வைப்பதற்கு பதில் Stamp Pad Ink எனும் மையை வாக்காளர்களின் கை விரல்களில் தவறுதலாக வைத்ததும், இதனால் தான் அந்த மை அழிந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சுதாரித்த அதிகாரிகள் அனைவரின் கை விரல்களிலும் அழியாத மை-யை வைத்தனர். இந்த சம்பவத்தால் குறிப்பிட்ட அந்த பூத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+